பாலஸ்தீனம் மீது இஸ்ரேல் தாக்குதலை கண்டித்து கம்யூனிஸ்டு கட்சிகள் ஆர்ப்பாட்டம்

பாலஸ்தீனம் மீது இஸ்ரேல் தாக்குதலை கண்டித்து கம்யூனிஸ்டு கட்சிகள் ஆர்ப்பாட்டம்
பாலஸ்தீனம் மீது இஸ்ரேல் தாக்குதலை கண்டித்து கம்யூனிஸ்டு கட்சிகள் சார்பில் வருகிற 7ம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

பாலஸ்தீன மக்கள் மீது இஸ்ரேல் அரசு கொடுத்துள்ள இனப் படுகொலையை தடுத்து நிறுத்த கோரி சிபிஐ, சிபிஐ (எம்), சிபிஐ(எம்எல்) இடதுசாரி கட்சிகள் சார்பில் வருகிற அக்டோபர் 7-ம் தேதி மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இது சம்பந்தமான ஆலோசனை கூட்டம் திருச்சி மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் இன்று 03.10.2024 நடைபெற்றது.

கூட்டத்தில் சிபிஎம் மாநில குழு உறுப்பினர் ஸ்ரீதர்,சிபிஎம் மாநகர் மாவட்ட செயலாளர் ராஜா, மலைக்கோட்டை பகுதி செயலாளர் லெனின், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஏஐடியுசி மாவட்ட பொதுச் செயலாளரும் திருச்சி மாநகராட்சி மாமன்ற உறுப்பினருமான க.சுரேஷ் ,சிபிஐ மாவட்ட செயலாளர் சிவா, மாவட்ட பொருளாளர் க.சண்முகம், மேற்கு பகுதி குழு செயலாளர் இரா.சுரேஷ் முத்துச்சாமி, கிழக்கு பகுதி செயலாளர் எஸ். சையது அபுதாகிர் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டார்கள்.

கூட்டத்தில் திருச்சி மாநகர் மாவட்டத்தில் 07. 10.2024 திங்கட்கிழமை காலை 10.00மணிக்கு திருச்சி ஜங்ஷன் வழிவிடு முருகன் கோயில் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சிபிஎம் மாவட்ட செயலாளர் ராஜா, சிபிஐ மாவட்ட செயலாளர் சிவா, ஆகியோர் தலைமையில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில துணைச் செயலாளர் மு.வீரபாண்டியன், சிபிஎம் மாநில செயற்குழு உறுப்பினர் க.பாலபாரதி, சிபிஐ (எம்எல்) சார்பில் ஞானதேசிகன் உள்ளிட்டோர் கலந்துகொண்டு உரையாற்றுகிறார்கள். இந்த ஆர்ப்பாட்டத்தினை சிறப்பாக நடத்துவது என கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

Tags

Next Story
Similar Posts
திருச்சி மாநகர் மாவட்ட  காங்கிரஸ் சார்பில் காங்கிரசார் நடைபயண யாத்திரை
பாலஸ்தீனம் மீது இஸ்ரேல் தாக்குதலை கண்டித்து கம்யூனிஸ்டு கட்சிகள் ஆர்ப்பாட்டம்
பட்டாவில் திருத்தம் செய்ய ரூ.20 ஆயிரம் லஞ்சம் வாங்கிய துணை தாசில்தார் கைது
திருச்சியில் காந்தி முகமூடி அணிந்து பள்ளி குழந்தைகள் விழிப்புணர்வு
திருச்சி என்ஐடி யில் ஒருங்கிணைந்த ஆசிரியர் கல்வித் திட்டம் துவக்க விழா
தேசிய அளவில் நடந்த தடகள போட்டியில் பதக்கம் பெற்ற வீராங்கனைகளுக்கு வரவேற்பு
திருச்சி பொன்மலைப்பட்டி வஉசி சாலையை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை
திருச்சி மாநகர் மாவட்டம் மார்க்கெட் கோட்ட    காங்கிரஸ் நிர்வாகிகள்  கூட்டம்
திருச்சியில் தண்ணீர் அமைப்பு சார்பில் பனை விதைகள் சேகரிப்பு நிகழ்ச்சி
திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் அண்ணா பிறந்த நாள் விழா
திருச்சி மாநகராட்சி அலுவலகத்தில் சமூக நீதி நாள் உறுதி மொழி ஏற்பு
மாநில, மாவட்ட அளவிலான போட்டிகளுக்கு தேர்வான விளையாட்டு வீரர்களுக்கு பாராட்டு
மாணவர்களின் கற்பனை திறனை அதிகரிக்க செய்யும் புத்தகம் வாசிப்பு பழக்கம்