/* */

திருச்சியில் கல்லூரி மாணவர் கிணற்றில் குதித்து தற்கொலை முயற்சி

திருச்சியில் கல்லூரி மாணவர் கிணற்றில் விழுந்து தற்கொலை முயற்சித்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

HIGHLIGHTS

திருச்சியில் கல்லூரி மாணவர் கிணற்றில் குதித்து தற்கொலை முயற்சி
X

பைல் படம்.

திருச்சி தில்லைநகர் பகுதியை சேர்ந்த அஸ்வின் (வயது 19). திருச்சி எடமலைப்பட்டிபுதூர் அருகில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் படித்து வருகிறார். இவருடைய தந்தை சிவானந்தம் இலங்கையில் பணிபுரிந்து வருகிறார்.

இந்த நிலையில் வழக்கம்போல கல்லூரிக்கு சென்ற அஸ்வின் திடீரென கல்லூரியில் உள்ள கிணற்றில் விழுந்து தற்கொலை முயற்சி செய்துள்ளார். இதைக்கண்ட கல்லூரி நிர்வாகம் அவரை மீட்டு திருச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

இச்சம்பவம் குறித்து எடமலைப்பட்டிபுதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அஸ்வின் எதற்காக தற்கொலை முயற்சி செய்தார் என்பது குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் கல்லூரி வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Updated On: 25 Feb 2022 1:15 PM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிவிப்புகளை...
  2. லைஃப்ஸ்டைல்
    வைட்டமின் ஈ காப்ஸ்யூல் பயன்படுத்த அழகு டிப்ஸ்!
  3. லைஃப்ஸ்டைல்
    நீங்கள் கண் சிமிட்டிக் கொண்டே இருக்கறீங்களா?
  4. லைஃப்ஸ்டைல்
    பிரியும் விடைக்கு ஏன் பிரியாவிடை..?
  5. வானிலை
    வானிலை முன்னறிவிப்பு: டெல்லி, உ.பி., ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில்...
  6. இந்தியா
    ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்: முடிவுக்கு வந்த போராட்டம், இயல்பு நிலை...
  7. லைஃப்ஸ்டைல்
    தண்ணீரை மென்று சாப்பிடு; சாப்பாட்டை குடி..!
  8. லைஃப்ஸ்டைல்
    சந்தோஷம் மின்னல் போல வந்து வந்து போகும்; அமைதி எப்போதுமே நிரந்தரமானது...
  9. கோவை மாநகர்
    கோவை நகரப் பகுதிகளில் மிதமான மழை ; மக்கள் மகிழ்ச்சி
  10. வீடியோ
    Savukku வழக்கில் மூன்று நாட்களில் நடந்தது என்ன? | அடுத்து என்ன...