திருச்சியில் மெகா தூய்மை பணியை துவக்கினார் கலெக்டர் பிரதீப்குமார்

திருச்சியில் மெகா தூய்மை பணியை துவக்கினார் கலெக்டர் பிரதீப்குமார்
X

திருச்சியில் மெகா துப்புரவு பணியை மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் துவக்கி வைத்தார்.

திருச்சியில் இன்று காலை மெகா தூய்மை பணியை கலெக்டர் பிரதீப்குமார் துவக்கி வைத்தார்.

திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று காலை மெகா துப்புரவு பணி நிகழ்ச்சி நடை பெற்றது. இந்த நிகழ்ச்சியை மாவட்ட கலெக்டர் பிரதீப்குமார் துவக்கி வைத்தார். துப்புரவு பணியாளர்களுக்கு கையுறை உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்களையும் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அதிகாரி இரா அபிராமி, மாவட்ட மகளிர் திட்ட இயக்குனர் ரமேஷ்குமார்,மாவட்ட ஊராட்சிகள் உதவி இயக்குனர் கங்காதரணி,மாநகராட்சி உதவி ஆணையர்கள் செல்வபாலாஜி, சண்முகம் உள்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
ai robotics and the future of jobs