/* */

திருச்சியில் தந்தையால் ரூ.50 ஆயிரத்திற்கு விற்கப்பட்ட குழந்தை மீட்பு

திருச்சியில் தந்தையால் ரூ.50 ஆயிரத்திற்கு விற்கப்பட்ட ஆண் குழந்தையை போலீசார் மீட்டு 4 பேரை கைது செய்தனர்.

HIGHLIGHTS

திருச்சியில் தந்தையால் ரூ.50 ஆயிரத்திற்கு விற்கப்பட்ட குழந்தை மீட்பு
X

திருச்சியில் ரூ.50 ஆயிரத்திற்கு விற்கப்பட்ட குழந்தை மீட்கப்பட்டது.

திருச்சி காந்திபுரம் தேவர் காலனி பகுதியை சேர்ந்தவர் அப்துல்சலாம். இவரது மனைவி கைருன்னிஷா. இவர்களுக்கு ஏற்கனவே 4 குழந்தைகள் உள்ள நிலையில், கடந்த 2 மாதத்திற்கு முன்பு 5-வதாக ஒரு ஆண் குழந்தை பிறந்துள்ளது. கூலி தொழிலாளியான அப்துல்சலாம் சரிவர எந்த வேலைக்கும் செல்லாமல் நண்பர்கள், உறவினர்களிடம் கடனாக பணத்தை பெற்று சூதாடி வந்துள்ளார்.

அந்த வகையில் ஆரோக்கியராஜ் என்பவரிடம் ரூ. 25 ஆயிரம் கடன் வாங்கியுள்ளார். இதனை ஈடுகட்ட ஆரோக்கியராஜ் தன்னுடைய உறவினர் ஒருவருக்கு குழந்தை இல்லாததால் தற்போது புதிதாக பிறந்த குழந்தையை தர வேண்டும் என்றும், கூடுதலாக ரூ.25 ஆயிரம் தருவதாகவும் கூறியுள்ளார். இதையடுத்து அப்துல்சலாம் கைருன்னிஷாவிடம் பேசி சமாதானம் செய்து மனதை மாற்றி கடந்த 2 மாதத்திற்கு முன்பு பிறந்த ஆண் குழந்தையை ஆரோக்கியராஜிடம் கொடுத்து பணத்தையும் பெற்றுள்ளார்.

பின்னர் தற்போது திடீரென கைருன்னிஷா தன்னுடைய குழந்தையை மீண்டும் திருப்பித் தர வேண்டும் என்று அப்துல் சலாமிடம் கேட்க, அதற்கு அவர் மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் கைருன்னிஷா உறையூர் போலீசில் புகார் ஒன்றை கொடுத்தார். இந்த புகார் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து பெற்ற மகனை ரூ. 50 ஆயிரத்துக்கு விற்ற தந்தை அப்துல்சலாம், அந்த குழந்தையை வாங்கிய ஆரோக்கியராஜ் மற்றும் அவருடைய உறவினரான பொன்னர் மற்றும் சந்தான மூர்த்தி ஆகியோரை கைது செய்தனர்.

Updated On: 24 Jan 2022 2:38 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    குடும்ப பல்கலையின் தலைவர்களுக்கு திருமணநாள்..! வாழ்த்துகிறோம்...
  2. லைஃப்ஸ்டைல்
    50 ஆண்டு திருமண வாழ்க்கை எனும் பொன்விழா! வாழ்த்தலாம் வாங்க
  3. லைஃப்ஸ்டைல்
    அம்மா அப்பாவுக்கு திருமண நாள் வாழ்த்து கவிதைகள்
  4. நாமக்கல்
    நாமக்கல் மாவட்டத்தில் பிளஸ் 1 தேர்வில் 92.58 சதவீதம் மாணவர்கள்...
  5. திருத்தணி
    திருத்தணி ஆர்கே பேட்டை அருகே கஞ்சா கடத்திய 3 பேர் கைது
  6. சோழவந்தான்
    உலக நன்மைக்காகவும் மழை வேண்டியும் சோழவந்தானில் யாகம்..!
  7. திருத்தணி
    சரக்கு வாகன ஓட்டுனரை வெட்டி வழிப்பறியில் ஈடுபட்ட கொள்ளையன் கைது
  8. நாமக்கல்
    சிபிஎஸ்இ 10, 12ம் வகுப்பு தேர்வுகளில் நேஷனல் பப்ளிக் பள்ளி 100 சதவீதம்...
  9. சோழவந்தான்
    சோழவந்தான் திரௌபதியம்மன் ஆலயத்தில் திருக்கல்யாண விழா..!
  10. நத்தம்
    நத்தம் பகவதி அம்மன் திருவிழா: காப்புக்கட்டுடன் தொடங்கியது..!