/* */

திருச்சியில் கலெக்டர் தலைமையில் செஸ் ஒலிம்பியாட் விழிப்புணர்வு நிகழ்ச்சி

திருச்சியில் கலெக்டர் பிரதீப்குமார் தலைமையில் செஸ் ஒலிம்பியாட் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

HIGHLIGHTS

திருச்சியில் கலெக்டர் தலைமையில் செஸ் ஒலிம்பியாட் விழிப்புணர்வு நிகழ்ச்சி
X

செஸ் ஒலிம்பியாட் தொடர்பான விழிப்புணர்வு பலகையில் திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் கையெழுத்திட்டார்.

44வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் வருகிற 28ம் தேதி மாமல்லபுரத்தில் தொடங்கி நடைபெற உள்ளது. இது தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மாவட்டம் தோறும் நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் திருச்சி மாவட்ட நிர்வாகம் சார்பில் அண்ணா விளையாட்டு அரங்கில் இன்று காலை நடந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு மாவட்டஆட்சியர் பிரதீப்குமார் தலைமை தாங்கினார்.

செஸ் விளையாட்டு தொடர்பான விழிப்புணர்வு பலகையில் கலெக்டர் பிரதீப்குமார் முதலில் கையெழுத்திட்டு துவக்கி வைத்தார். இதனை தொடர்ந்து நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் வரிசையாக கையெழுத்திட்டனர். இதில் மாவட்ட விளையாட்டு அலுவலர் ஞானசுகந்தி, வருவாய் கோட்டாட்சியர் தவச்செல்வம், வட்டாட்சியர் கலைவாணி மற்றும் விளையாட்டு வீரர்கள், தன்னார்வலர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 19 July 2022 7:49 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    என் இதய மாளிகையின் ராணி..! என்னை ஆட்சிபுரிபவள்..!
  2. பட்டுக்கோட்டை
    வேளாண் தொழில்நுட்பங்களை பயன்படுத்துங்க..! ஜோரான மகசூலை அள்ளுங்க..!
  3. குமாரபாளையம்
    ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களுக்கு பாராட்டு..!
  4. குமாரபாளையம்
    பணி நிறைவு பெறும் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா!
  5. வீடியோ
    மத்திய அரசின் ஐடி பாதுகாப்பு சட்டம் | இந்தியாவில் Whatsapp சேவை...
  6. குமாரபாளையம்
    கிணற்றில் விழுந்த பசுவை மீட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர்!
  7. காஞ்சிபுரம்
    பாரதியார் உண்டு உறைவிட பள்ளி மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா..!
  8. காஞ்சிபுரம்
    மருத்துவ மாணவர்களுக்கு புற்று நோயியல் கல்வி மற்றும் விழிப்புணர்வு...
  9. லைஃப்ஸ்டைல்
    நீ சென்ற பாதைநோக்கிய பயணத்தில் இருக்கிறேன் நான்..!
  10. சினிமா
    யாரிந்த அக்ஷய் கமல்..? 'குக் வித் கோமாளி' சீசன் 5 போட்டியாளர்..!