/* */

திருச்சி மாவட்டத்தில் கஞ்சா விற்ற 3 பேர் கைது- சிறையில் அடைப்பு

திருச்சியில் கஞ்சா விற்ற 3 பேர் கைது.

HIGHLIGHTS

திருச்சி மாவட்டத்தில்  கஞ்சா விற்ற 3 பேர் கைது- சிறையில் அடைப்பு
X

திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் மீன்மார்க்கெட் அருகே கஞ்சா விற்றதாக திருச்சி பிள்ளைமாநகர் பகுதியை சேர்ந்த சுதாகரை (வயது 42) காந்தி மார்க்கெட் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மாதரசி ஸ்டெல்லா மேரி கைது செய்தார். அவரிடம் இருந்து 1 கிலோ 150 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் ஸ்ரீரங்கம் அருகே மூலத்தோப்பு பகுதியில் கஞ்சா விற்றதாக ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் பகுதியை சேர்ந்த சுதாகர் (வயது 36) என்பவரை ஸ்ரீரங்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அறிவழகன் கைது செய்தார். அவரிடம் இருந்து 1 கிலோ 400 கிராம் எடையுள்ள கஞ்சா மற்றும் ஒரு மொபட் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.

இதுபோல் திருச்சி ராம்ஜிநகர் மில்காலனி பகுதியில் கஞ்சா விற்றதாக அதே பகுதியை சேர்ந்த ரஞ்சித்குமாரை (30) ராம்ஜிநகர் போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 250 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட மூவரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

Updated On: 9 Dec 2021 7:55 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அம்மு குட்டி செல்லத்துக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்!
  2. லைஃப்ஸ்டைல்
    காலை வணக்கம் சொல்லும் இளம்காலை நேரக்காற்று!
  3. இந்தியா
    போதையில் கார் ஓட்டி ஏற்படுத்திய விபத்தில் 2 பேர் உயிரிழப்பு :...
  4. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை
  5. கோவை மாநகர்
    பெங்களூரு குண்டுவெடிப்பு தொடர்பாக கோவையில் என்.ஐ.ஏ. சோதனை
  6. தென்காசி
    தென்காசி மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை
  7. பொன்னேரி
    தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்த 2.வயது சிறுமி உயிரிழப்பு
  8. ஆன்மீகம்
    புத்த பூர்ணிமா எப்படி கொண்டாடுகிறோம்..?
  9. லைஃப்ஸ்டைல்
    தீபாவளி பண்டிகையும் மற்ற மாநிலங்களில் கொண்டாடும் விதமும்
  10. பூந்தமல்லி
    வெங்கல் அருகே லாரிகளை சிறை பிடித்து மக்கள் போராட்டம்