/* */

திருச்சியில் காரில் வைத்து கஞ்சா விற்ற 3 பேர் கைது

திருச்சியில் காரில் வைத்து கஞ்சா விற்பனை செய்த 3 பேரை கோட்டை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

திருச்சியில் காரில் வைத்து கஞ்சா விற்ற 3 பேர் கைது
X

திருச்சி கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் தயாளன் மற்றும் போலீசார் சின்ன கடை வீதி, ஆண்டாள் தெரு ஆகிய பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது சின்ன கடை வீதி, ஆண்டாள் வீதி சந்திப்பு பகுதியில் ஒரு கார் நின்றது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் தயாளன் காரில் இருந்தவர்களிடம் விசாரித்தபோது அந்த காரில் கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது.

அதை தொடர்ந்து காரையும், அதில் இருந்த இரண்டே கால் கிலோ கஞ்சாவையும் பறிமுதல் செய்து, காரில் இருந்த திருச்சி மாவட்டம் துவாக்குடி மெயின் ரோட்டை சேர்ந்த தனசேகரன் (வயது 38), கீழ ஆண்டார் வீதி, இச்சிமரசந்தை சேர்ந்த உதயகுமார் (வயது 29), கீழ தேவதானம் வீரமுத்து நகரை சேர்ந்த ஆண்ட்ரூஸ் (வயது 28) ஆகிய 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவின் மதிப்பு ரூ.22 ஆயிரத்து 500 இருக்கும் என்பது குறிப்பிடத் தக்கது.

Updated On: 6 Oct 2021 5:45 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அடிக்கடி முகத்தில் சவரம் செய்தால் முடி அடர்த்தியாக வளருமா?
  2. உலகம்
    உலகில் அதிக எண்ணிக்கையில் இந்தியர்கள் வசிக்கும் நாடுகள் குறித்து...
  3. லைஃப்ஸ்டைல்
    ராகி தோசை மற்றும் தேங்காய் சட்னி செய்வது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    கருவுற்ற தாய்மார்களுக்கு ஏற்படும் தைராய்டு பிரச்னைகளை தடுப்பது...
  5. மேட்டுப்பாளையம்
    மேட்டுப்பாளையத்தில் 1.15 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. தொழில்நுட்பம்
    ஏலியன் நாகரிக அறிகுறிகளைக் காட்டும் 7 நட்சத்திரங்களை கண்டறிந்த...
  7. லைஃப்ஸ்டைல்
    வண்ண வண்ணமாக அரிசி..! எது ஆரோக்யம்..?
  8. கோவை மாநகர்
    சட்டமன்றத் தேர்தல் கூட்டணியை காங்கிரஸ் தலைமை தான் முடிவு செய்யும் :...
  9. லைஃப்ஸ்டைல்
    வயிற்றுப்போக்கை கட்டுப்படுத்தும் சத்தான பானங்கள் பற்றித் தெரியுமா?
  10. லைஃப்ஸ்டைல்
    குளிர்சாதன பெட்டியில்(Fridge) வைக்கக்கூடாத பழங்கள்..!