/* */

திருச்சியில் கேபிள் நிறுவன தொழிலாளியை தாக்கி கொலை மிரட்டல்

திருச்சியில் கேபிள் நிறுவன தொழிலாளியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.

HIGHLIGHTS

திருச்சியில் கேபிள் நிறுவன தொழிலாளியை தாக்கி கொலை மிரட்டல்
X

திருச்சி கோட்டை காவல் நிலையம் (பைல் படம்)

திருச்சி பெரியகடைவீதியை சேர்ந்தவர் கணேசன் (வயது 50). இவர் பெரிய கடைவீதி பகுதியிலுள்ள சங்கீத் வீடியோ கேபிள் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். இவரது முதலாளிக்கும் மற்றொரு கேபிள் நெட்வொர்க் முதலாளிக்கும் இடையே பணம் கொடுக்கல் வாங்கல் சம்பந்தமாக தகராறு நடைபெற்று வந்துள்ளது.

இந்நிலையில் கணேசன் சம்பவத்தன்று தெற்கு சுண்ணாம்புக்கார தெருவில் உள்ள முனீஸ்வரன் கோயில் அருகே கேபிள் வேலை பார்த்துக் கொண்டிருந்த போது அங்கு வந்த அடையாளம் தெரியாத இருவர் கணேசனை தகாத வார்த்தைகளால் பேசி கத்தியால் அவரது வலது கையில் கிழித்து கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.

இது குறித்து கணேசன் கோட்டை போலீசில் புகார் கொடுத்தார். புகாரின்பேரில் கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து கணேசனை கத்தியால் கிழித்து கொலை மிரட்டல் விடுத்த இருவரை வலைவீசி தேடி வருகின்றனர்.

Updated On: 23 Nov 2021 10:40 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இல்லற வாழ்வில் நல்லறம் கண்ட தம்பதிக்கு வாழ்த்துகள்..!
  2. மேட்டுப்பாளையம்
    கோவில்பாளையம் பகுதியில் 2 கிலோ கஞ்சா சாக்லேட் பறிமுதல்..!
  3. தொழில்நுட்பம்
    சந்திரனில் முதல் ரயில் பாதை அமைக்க நாசா திட்டம்
  4. லைஃப்ஸ்டைல்
    கரம் கொடுத்த நீ, பிரியாத வரம் ஒன்று தாராய்..!
  5. லைஃப்ஸ்டைல்
    காதல் வானில் பறக்கும் ஜோடிக் கிளிகளுக்கு வாழ்த்துகள்..!
  6. வீடியோ
    🤔Ilaiyaraaja அப்புடி என்ன பண்ணிட்டாரு?RV Udhayakumar OpenTalk...
  7. லைஃப்ஸ்டைல்
    இதயமே நீதானே என் அன்பே..! உன்னை சரணடைந்தேன்..!
  8. இந்தியா
    வாக்காளரை அறைந்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏ! திருப்பி அறைந்த...
  9. இந்தியா
    மும்பையில் புழுதி புயல், மழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு
  10. உலகம்
    பெண்கள் உதட்டில் லிப்ஸ்டிக் பூசிக்கொள்ள தடை எந்த நாட்டில் என...