/* */

திருச்சியில் பள்ளி ஆசிரியை மீது பஸ் மோதி விபத்து: சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு

திருச்சியில் பள்ளி ஆசிரியர் மீது தனியார் கல்லூரி பேருந்து மோதியதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார்.

HIGHLIGHTS

திருச்சியில் பள்ளி ஆசிரியை மீது பஸ் மோதி விபத்து: சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு
X

ஆசிரியை மீது மோதிய தனியார் கல்லூரி பேருந்து.

திருச்சி வயலூர் ரோடு அம்மையப்ப பிள்ளை நகர் பகுதியைச் சேர்ந்தவர் மங்கையர்கரசி (வயது 49). திருச்சி கண்டோன்மெண்ட் பகுதியில் உள்ள செயிண்ட் ஜேம்ஸ் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வந்துள்ளார்.

இந்நிலையில் இன்று காலை வீட்டிலிருந்து பள்ளிக்கு செல்வதற்காக தனது இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தபோது, திருச்சி கோர்ட் எம்ஜிஆர் சிலை அருகே எதிர்பாராத விதமாக அவர் மீது தனியார் கல்லூரி பஸ் மோதி உள்ளது.

இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே அவர் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து திருச்சி வடக்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பள்ளி ஆசிரியை உயிரிழந்ததை தொடர்ந்து செயிண்ட் ஜேம்ஸ் பள்ளிக்கு இன்று அரைநாள் விடுமுறை விடப்பட்டது. இந்த விபத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Updated On: 20 Nov 2021 7:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    போலரைஸ்டு சன்கிளாஸ்ல அப்படி என்னதான் ஸ்பெஷல்?
  2. திருப்பூர்
    திருப்பூா் தொகுதி தோ்தல் வாக்கு எண்ணும் பணி; 1,274 முகவா்கள் நியமனம்
  3. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் திடீர் கோடை மழை!விவசாயிகள் பெரு மகிழ்ச்சி!
  4. லைஃப்ஸ்டைல்
    அன்பையும், அர்ப்பணிப்பையும் கொண்டாடும் "வயிர கல்யாணம்"
  5. காஞ்சிபுரம்
    திருமுக்கூடல் ஸ்ரீ செல்லியம்மன் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  6. திருப்பூர்
    ஜவுளி உற்பத்தியாளா்கள் ஒப்பந்த கூலியை வழங்க நடவடிக்கை எடுக்க...
  7. லைஃப்ஸ்டைல்
    ஆண்களுக்கான சரியான சன்கிளாஸ் தேர்வு செய்வது எப்படி?
  8. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் புண்ணிய கோடீஸ்வரர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  9. நாமக்கல்
    வைகாசி மாத முதல் ஞாயிற்றுக்கிழமை ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரம்
  10. லைஃப்ஸ்டைல்
    சரஸ்வதி பூஜையின் தோற்றமும் வாழ்த்துக்களும்