/* */

திருச்சி தில்லைநகரில் மருந்து கடை பூட்டை உடைத்து பணம் கொள்ளை

திருச்சியில் மெடிக்கல் பூட்டை உடைத்து பணம் கொள்ளை

HIGHLIGHTS

திருச்சி தில்லைநகரில் மருந்து கடை பூட்டை உடைத்து பணம் கொள்ளை
X

திருச்சி தில்லைநகரில் உள்ள ஒரு தனியார் காம்ப்ளக்சில் வாசன் மெடிக்கல் கடை செயல்பட்டு வருகிறது. அதன் ஊழியர் நேற்று இரவு வழக்கம் போல கடையை மூடி பூட்டி விட்டு சென்றுள்ளார். இந்நிலையில் இன்று காலை வழக்கம் போல கடையை திறப்பதற்காக திரும்ப வந்து பார்த்தபோது கடையின் ஷட்டர் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்து வாசன் மெடிக்கல்ஸ் மண்டல மேலாளர் விஜயரங்கன் தில்லை நகர் போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் தில்லைநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

இதில் கடையில் முதல்நாள் விற்பனை செய்யப்பட்ட பணம் ரூ.50 ஆயிரம் இருந்தது கொள்ளை போனது தெரியவந்தது. இது குறித்து வழக்கு பதிவு செய்து கடையின் பூட்டை உடைத்து கொள்ளை அடித்த மர்ம நபர்களை போலீசார் அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. பதிவுகளை பார்வையிட்டு தேடி வருகின்றனர்.

Updated On: 9 Jan 2022 2:22 PM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    😭தேம்பி தேம்பி அழுத பள்ளி மாணவி | | ஆறுதல் சொன்ன Annamalai |...
  2. வீடியோ
    DMK-வில் புல்லுருவிகளை களையெடுக்க மீண்டும் இறக்கப்படுகிறார் Prashant...
  3. லைஃப்ஸ்டைல்
    ‘இன்று போல் என்றும் வாழ்க’ - 25வது திருமண ஆண்டு வாழ்த்துகள்
  4. லைஃப்ஸ்டைல்
    அண்ணா அண்ணிக்கு அன்பு நிறைந்த திருமண நாள் வாழ்த்துகள்...!
  5. ஆன்மீகம்
    தமிழில் நட்சத்திர பிறந்த நாள் வாழ்த்துகளை சொல்வோம்!
  6. ஆன்மீகம்
    ஈகைப் பெருநாளின் சிறப்புகளும் வாழ்த்து மொழிகளும்
  7. அரசியல்
    பாஜகவுடன் சேர்வது தற்கொலைக்கு சமம் என்ற தினகரன் இப்ப ஏன் கூட்டணி...
  8. சோழவந்தான்
    சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோயில் தேரில் பொம்மைகள் கண் திறப்பு
  9. இராஜபாளையம்
    தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி ஆலய வைகாசி விசாக திருவிழா
  10. திருப்பரங்குன்றம்
    ஆறுமுக மங்கலம் வெள்ளாளர் உறவின் முறை சங்க டிரஸ்ட் புதிய நிர்வாகிகள்...