திருச்சியில் தடை செய்யப்பட்ட 20 மூட்டை புகையிலை பொருட்கள் பறிமுதல்

திருச்சியில் தடை செய்யப்பட்ட  20 மூட்டை புகையிலை பொருட்கள் பறிமுதல்
X

திருச்சியில் பறிமுதல் செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் வாகனத்தில் ஏற்றி செல்லப்பட்டது.

திருச்சியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 20 மூட்டை புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

திருச்சி வயலுார் ரோடு பகுதியில் உள்ள ஒரு வீட்டில் ஏராளமான தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்திருப்பதாக உறையூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் வயலுார் ரோடு ராமலிங்க நகர் 5-ஆவது குறுக்கு சந்தில் உள்ள ஒரு வீட்டில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.

போலீசார் சோதனையிட வந்ததை அறிந்த அந்த வீட்டில் வாடகைக்கு தங்கிருந்த பக்ரூதீன் என்பவர் தப்பி ஓடி உள்ளார். ஆனாலும் அந்த வீட்டில் போலீசார் நடத்திய சோதனையில் மூட்டை மூட்டையாக அங்கு குட்கா பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து 20 மூட்டைகளை கைப்பற்றிய போலீசார், மினி லோடு வேனில் ஏற்றி காவல் நிலையத்திற்கு எடுத்து சென்றனர். கைப்பற்றப்பட்ட குட்கா 100 கிலோவிற்கும் மேலாக இருக்கும் என கூறப்படுகிறது.

தொடர்ந்து போலீசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதோடு, தலைமறைவான நபரையும் தேடி வருகின்றனர்.

Tags

Next Story
how ai is used in education