/* */

மாநகர போலீஸ் கமிஷனரிடம் விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு மனு

திருச்சியில் 46 நாட்கள் உண்ணாவிரதம் இருக்க அனுமதி கேட்டு, விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு, மாநகர போலீஸ் கமிஷனரிடம் மனு அளித்தார்.

HIGHLIGHTS

மாநகர போலீஸ் கமிஷனரிடம் விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு மனு
X

உண்ணாவிரத போராட்டத்திற்கு அனுமதி கோரி, விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு திருச்சி மாநகர காவல் ஆணையரிடம் மனு அளித்தார்.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று புதிய வேளாண் சட்டங்களை வாபஸ் பெற வேண்டும். விவசாய விளைப்பொருட்களுக்கு இரண்டு மடங்கு இலாபம் தர வேண்டும். உத்திர பிரதேசம் மாநிலம் லக்கிம்பூர் மாவட்டம் திகுன்னியா அருகில் பன்வீர்பூரில் விவசாயிகளை கொன்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்த, திருச்சியில் 11.10.2021 முதல் 26.11.2021 வரை உண்ணாவிரதம் இருக்க அனுமதி கோரி, தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு, இன்று திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயனையும், திருச்சி மாநகர சட்டம் & ஒழுங்கு காவல் துணை கமிஷனர் சக்திவேலையும், சுப்ரமணியபுரத்தில் உள்ள அலுவலகத்தில் சந்தித்து மனு கொடுத்தார்.

உடன், ஸ்ரீரங்கம் சரக போலீஸ் உதவி கமிஷனர் சுந்தரமூர்த்தி, சங்கத்தின் மாநில துணை தலைவர் மேகராஜன், மாநில செயலாளர் நகர் ஜான்மெல்கியோராஜ், மாநில செய்திதொடர்பாளர் பிரேம்குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.

Updated On: 9 Oct 2021 12:30 PM GMT

Related News

Latest News

  1. செய்யாறு
    செய்யாற்றில் பள்ளி வாகனங்கள் ஆய்வு
  2. லைஃப்ஸ்டைல்
    அருமையான தோழமைக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்து
  3. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் தினமும் பெய்யும் மழையால் மாயமானது அக்னி நட்சத்திர வெயில்
  4. கல்வி
    தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்தில் பட்ட மற்றும் பட்டய படிப்புகள்
  5. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியத்தில் மந்திரி மாதிரி வாழணுமா? அடிக்கடி முந்திரி
  6. லைஃப்ஸ்டைல்
    தனக்கென வாழாமல் நமக்கென வாழும் தந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்து
  7. தமிழ்நாடு
    மணிக்கு 200 கி. மீ.வேகம்: பறக்கும் டாக்சி தயாரிக்கும் முயற்சியில்...
  8. லைஃப்ஸ்டைல்
    ருசியான சில்லி பரோட்டா செய்வது எப்படி?
  9. லைஃப்ஸ்டைல்
    குழம்பு மிளகாய் பொடி வீட்டிலேயே தயார் செய்வது எப்படி?
  10. திருச்சிராப்பள்ளி மாநகர்
    கை நழுவி போகிறதா? திருச்சி பஞ்சப்பூரில் அமைய உள்ள ஒலிம்பிக் அகாடமி