30 ஆண்டு தலைமறைவு குற்றவாளி:தகவல் தெரிவிக்க திருச்சி போலீசார் வேண்டுகோள்

30 ஆண்டு தலைமறைவு குற்றவாளி:தகவல் தெரிவிக்க திருச்சி போலீசார் வேண்டுகோள்
X

முப்பது ஆண்டு தலைமறைவு குற்றவாளி ராமலிங்கம்.

30 ஆண்டு தலை மறைவாக உள்ள குற்றவாளி பற்றி தகவல் தெரிவிக்க திருச்சி போலீசார் வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.

திருச்சி மாநகரம் கோட்டை குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் கடந்த 1991-ஆம் வருடம் பதியப்பட்ட 1244 குற்ற வழக்கு எண்ணில் ஆதாய கொலை வழக்கில் தொடர்புடைய குற்றவாளியான நாகப்பட்டினம் மாவட்டம் சேஷமூலை கிராமம் தெற்கு தெருவில் வசித்து வந்த கலிய பெருமாள் மகன் ராமலிங்கம் என்பவர் கடந்த 1991-ஆம் வருடம் திருச்சி அல்லிமால் தெருவை சேர்ந்த ஒரு ஹோட்டல் மேனேஜராக வேலை பார்த்த நாராயணசாமி என்பவரை 3 பேருடன் கொலை செய்து நகை பறித்து சென்ற வழக்கில் கைது செய்யப்பட்டார்.

பின்னர் ஜாமீனில் சென்றவர் வழக்கு விசாரணைக்காக நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தொடர்ந்து தலைமறைவாக இருந்து வந்தவரை கடந்த 09.09.2021 முதல் விளம்பரப்படுத்தப்பட்ட குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

ராமலிங்கம் என்பவருக்கு புகலிடம் அளிப்பதோ அவரது இருப்பிடம் பற்றிய தகவலை அறிந்து மறைக்க முயல்வதோ சட்டப்படி குற்றமாகும். அவரைப்பற்றி தகவல் தெரிந்தால் தகவல் தெரிவிக்க கீழ்கண்ட தொலைபேசி எண்கள் காவல்துறையால் தெரிவிக்கப்பட்டுள்ளது. கோட்டை குற்றச்சரக உதவி ஆணையர் : 0431-2712288, 94981-00622 கோட்டை குற்றபிரிவு காவல்நிலைய காவல் ஆய்வாளர்: 94434-61010

கோட்டை குற்றப்பிரிவு காவல் நிலைய உதவி ஆய்வாளர்: 94981-56489

கோட்டை குற்றப்பிரிவு காவல் நிலையம்: 0431- 2717832 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்க வேண்டும் என்று கோட்டை போலீசாரால் வேண்டுகோள் விடப்பட்டு உள்ளது.

Tags

Next Story