/* */

திருச்சியில் வியாபாரியிடம் வழிப்பறி செய்தவர் குண்டர் சட்டத்தில் கைது

திருச்சியில் வியாபாரியிடம் வழிப்பறி செய்தவர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

HIGHLIGHTS

திருச்சியில் வியாபாரியிடம் வழிப்பறி செய்தவர் குண்டர் சட்டத்தில் கைது
X

திருச்சியில் பழம் வியாபாரியிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த, பல திருட்டு வழக்குகளில் தொடர்புடைய ரவுடி குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

திருச்சி மாநகர காவல் ஆணையராக கார்த்திகேயன் பொறுப்பேற்றது முதல் ரவுடிகள், சரித்திரபதிவேடு குற்றவாளிகள், வழிப்பறி செய்யும் குற்றவாளிகள், சமூக விரோத செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுத்து வருகிறார். மேலும் திருச்சி மாநகர காவல் துணை ஆணையர்கள், உதவி ஆணையர்கள் மற்றும் காவல் ஆய்வாளர்களுக்கு சமூக விரோதிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கும்படி அறிவுரையும் வழங்கி உள்ளார்.

கடந்த 11.10.22-ம்தேதி திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் நின்று கொண்டிருந்த பழ வியாபாரி ஒருவரிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் கொள்ளையடித்து சென்றதாக பெறப்பட்ட புகாரின்பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, ரவுடி பாபு (எ) குளத்துக்கரை பாபு (வயது 30)என்பவரை கைது செய்து, நீதிமன்ற காவலுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் விசாரணையில் ரவுடி பாபு (எ) குளத்துக்கரை பாபு மீது 14 திருட்டு வழக்கும், கத்தியை காட்டி மிரட்டி பணம் கொள்ளையடித்ததாக 5 வழக்குகள் உட்பட பல்வேறு காவல் நிலையங்களில் 25 வழக்குகள் நிலுவையில் இருப்பது விசாரணையில் தெரிய வந்தது.

எனவே பாபு (எ) குளத்துக்கரை பாபு என்பவர் தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபடுவதும், திருட்டு மற்றும் கத்தியை காட்டி பணம் கொள்ளையடிப்பது போன்ற குற்றச்செயல்களில் ஈடுபடுபவார் என விசாரணையில் தெரியவருவதால், மேற்கண்ட எதிரியின் தொடர் குற்ற நடவடிக்கையை தடுக்கும் பொருட்டு கண்டோன்மென்ட் குற்றப்பிhpவு காவல் ஆய்வாளர் கொடுத்த அறிக்கையினை பரிசீலனை செய்து, திருச்சி மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன், மேற்படி குளத்துக்கரை பாபுவை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின்கீழ் கைது செய்ய ஆணையிட்டார். அதனை தொடர்ந்து திருச்சி மத்திய சிறையில் உள்ள பாபு (எ) குளத்துக்கரை பாபுவிடம் இன்று குண்டர் தடுப்பு சட்டம் ஆணை சார்வு செய்யப்பட்டது.

மேலும், திருச்சி மாநகரில் இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுவோர் மீது சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும், தொடர்ந்து குற்ற செயல்களில் ஈடுபடும் நபர்கள் எந்தவித விசாரணையும் இன்றி ஒரு வருட காலம் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்யப்படுவார்கள் என திருச்சி மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Updated On: 18 Nov 2022 2:26 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அருமையான தோழமைக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்து
  2. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியத்தில் மந்திரி மாதிரி வாழணுமா? அடிக்கடி முந்திரி
  3. லைஃப்ஸ்டைல்
    தனக்கென வாழாமல் நமக்கென வாழும் தந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்து
  4. லைஃப்ஸ்டைல்
    ருசியான சில்லி பரோட்டா செய்வது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    குழம்பு மிளகாய் பொடி வீட்டிலேயே தயார் செய்வது எப்படி?
  6. ஆன்மீகம்
    தியாகத் திருநாளாம் பக்ரீத் வாழ்த்து சொல்லலாம் வாங்க
  7. கோவை மாநகர்
    கோவை மாநகரில் ஒரு மணி நேரம் கனமழை ; மக்கள் மகிழ்ச்சி
  8. நாமக்கல்
    வெண்ணந்தூரில் தனி செயலாளரின் தந்தையின் படத்திற்கு முதல்வர் மாலை...
  9. லைஃப்ஸ்டைல்
    கிரடிட் கார்டு பயன்பாட்டில் இவ்வளவு நன்மைகளா?
  10. லைஃப்ஸ்டைல்
    தலைமுடி வளர்ச்சிக்கு இனிமேல் முட்டையை பயன்படுத்துங்க!