/* */

ஓடும் பஸ்சில் பெண்ணுக்கு மயக்க கேக் கொடுத்து 9 பவுன் நகை அபேஸ்

ஓடும் பஸ்சில் பெண்ணுக்கு மயக்க கேக் கொடுத்து 9 பவுன் நகை அபேஸ் செய்யப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

HIGHLIGHTS

ஓடும் பஸ்சில் பெண்ணுக்கு மயக்க கேக் கொடுத்து 9 பவுன் நகை அபேஸ்
X

கரூர் மாவட்டம் குளித்தலை தாலுகா நெய்தலூரை சேர்ந்த மதியரசனின் மனைவி புஷ்பவல்லி (வயது 50). இவர் சம்பவத்தன்று காரைக்காலில் இருந்து திருச்சிக்கு பஸ்சில் வந்தார். வழியில் கும்பகோணத்தில் அந்த பஸ்சில் ஏறிய ஒரு பெண், புஷ்பவல்லிக்கு மயக்க மருந்து கலந்த கேக் கொடுத்ததாக தெரிகிறது. இதனால் அவர் பஸ்சில் மயங்கி விட்டார்.

இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்ட அந்த பெண், புஷ்பவல்லி கழுத்தில் அணிந்திருந்த 9 பவுன் நகைகளை அபேஸ் செய்து கொண்டு சென்றுவிட்டார். மயக்கம் தெளிந்து அவர் பார்த்தபோது, அந்த பஸ் திருச்சி மத்திய பஸ் நிலையத்துக்கு வந்து விட்டது. அப்போது தான், நகைகளை பறி கொடுத்தது அவருக்கு தெரிய வந்தது.

இதுகுறித்த புகாரின்பேரில் திருச்சி கண்டோன்மெண்ட் போலீசார் வழக்குப்பதிவு செய்து, பெண்ணிடம் மயக்க கேக் கொடுத்து நகைகளை திருடிச்சென்ற மர்ம பெண்ணை தேடி வருகிறார்கள்.

Updated On: 2 Jan 2022 11:42 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    குலதெய்வம் ஒரு குடும்ப உறுப்பினர் இயக்குநர் Perarasu உருக்கம்...
  2. தமிழ்நாடு
    தமிழகத்தில் தேனி, விருதுநகர், தென்காசி மாவட்டங்களுக்கு கனமழை...
  3. இந்தியா
    தொலை தொடர்புத் துறை பெயரில் போலி அழைப்புகள்: மத்திய அரசு எச்சரிக்கை
  4. லைஃப்ஸ்டைல்
    அன்னைக்கு இன்னைக்கு பிறந்தநாள்..! வாழ்த்துகிறோம்..!
  5. லைஃப்ஸ்டைல்
    வார்த்தைகளால் பூ தொடுத்து அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  6. இந்தியா
    உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த நான்கு மாத குழந்தை!
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி கோர்ட்டில் ஆஜர்: சவுக்கு சங்கர் லால்குடி கிளை சிறையில்...
  8. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் இருந்தபடியே பெண்கள் சம்பாதிப்பது எப்படி?
  9. ஆன்மீகம்
    நடப்பாண்டில் வைகாசி விசாகம் எப்போது வருகிறது தெரியுமா?
  10. லைஃப்ஸ்டைல்
    ருசியான எண்ணெய் கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி?