/* */

திருச்சியில் பொங்கல் கொண்டாட்டத்தின்போது ஓட்டலில் சூதாடிய 9 பேர் கைது

திருச்சியில் பொங்கல் கொண்டாட்டம் ஓட்டலில் அறை எடுத்து சூதாடிய 9 பேரை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

திருச்சியில் பொங்கல் கொண்டாட்டத்தின்போது ஓட்டலில் சூதாடிய 9 பேர் கைது
X

கண்டோன்மெண்ட் காவல் நிலையம் (பைல் படம்).

பொங்கல் பண்டிகை நேற்று முன்தினம் நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. பொங்கலை கொண்டாடுவதற்காக வெளியூரில் தங்கி வேலை பார்க்கும் பலரும் சொந்த ஊருக்கு திரும்பினர். இந்நிலையில் பொங்கலை சிறப்பாக கொண்டாடும் வகையில் திருச்சி மத்திய பஸ் நிலையம் அருகே உள்ள ஒரு தனியார் ஓட்டலில் அறை எடுத்து சிலர் பணம் வைத்து சூதாடுவதாக கன்டோன்மெண்ட் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

தகவலை இதையடுத்து கன்டோன்மெண்ட் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கிறிஸ்துராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடம் சென்று சூதாட்டம் நடந்த அறையில் அதிரடி சோதனை செய்தனர்.

அப்போது அங்கு சூதாடிய ராம்குமார் (46), மணி (56), சம்சுதீன் (39), இளங்கோ (60), அரசு (எ) வர்கீஸ் (70), சந்தானகோபாலன் (52), அருண்குமார் (34), கணேஷ்குமார் (45), அப்துல் மாலிக் (39) ஆகிய 9 பேரை போலீசார் கைது செய்து அவர்களிட மிருந்து ரூ.8,250/-ஐ பறிமுதல் செய்தனர்.

Updated On: 16 Jan 2022 7:04 AM GMT

Related News

Latest News

  1. மதுரை மாநகர்
    ப்ளஸ் 2 தேர்வு: மதுரை மத்திய சிறையில் அதிக மதிப்பெண் ஒருவர் சாதனை
  2. லைஃப்ஸ்டைல்
    வெற்றியை ஊக்குவிக்கும் "ஜெத்து".. மேற்கோள்களும் விளக்கங்களும்
  3. லைஃப்ஸ்டைல்
    வாழ்வின் வழிகாட்டி: தமிழ் ஞானப் பொக்கிஷங்கள்
  4. லைஃப்ஸ்டைல்
    கோபத்தின் விஷம்: சினத்தை அமைதிப்படுத்தும் தமிழ் வரிகள்
  5. ஆன்மீகம்
    கிரக பெயர்ச்சியால் கலக்கமா..? அப்ப இதை படிங்க..!
  6. வழிகாட்டி
    ஒரு வரலாற்று கலாசாரம் முடிவுக்கு வருகிறது..!
  7. சினிமா
    ஒரு கோடி ரூபாய் ராயல்டி பெற்றாரா மணிரத்தினம்..?
  8. ஈரோடு
    சித்தோடு அருகே 810 கிலோ தங்கம் ஏற்றிச் சென்ற வாகனம் கவிழ்ந்து விபத்து
  9. தேனி
    வீரபாண்டி கௌமாரியம்மன் திருவிழா இன்று தொடங்கியது..!
  10. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்