/* */

திருச்சியில் பெண்ணிடம் 8 பவுன் சங்கிலி பறிப்பு: 2 பேருக்கு போலீசார் வலை

திருச்சியில் பெண்ணிடம் 8 பவுன் தாலிசங்கிலி பறிப்பில் ஈடுபட்ட 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

HIGHLIGHTS

திருச்சியில் பெண்ணிடம் 8 பவுன் சங்கிலி பறிப்பு: 2 பேருக்கு போலீசார் வலை
X

பைல் படம்.

திருச்சி உறையூர் தோப்புகுளம் அருணாச்சலம் நகரை சேர்ந்தவர் கிருஷ்ணவேணி (வயது 45). இவர் நேற்று மாலை உறையூர் மார்க்கெட்டில் இருந்து காய்கறி வாங்கிக் கொண்டு தனது ஸ்கூட்டரில் வீட்டுக்கு சென்றார்.

வீடு அருகே சென்றபோது அவரை பின்தொடர்ந்து வந்த சுமார் 25 வயது மதிக்கத்தக்க 2 வாலிபர்கள் கிருஷ்ணவேணியின் கழுத்தில் கிடந்த 8 பவுன் தாலிச்சங்கிலியை பறித்தனர்.

உடனடியாக சுதாரித்துக் கொண்ட அவர், அதில் ஒரு வாலிபரை பிடித்து திருடன், திருடன் என்று சத்தம் போட்டார். ஆனால் அருகில் யாரும் இல்லாததால் அவர்கள் கிருஷ்ணவேணியை கீழே தள்ளிவிட்டு தப்பிச்சென்றனர்.

இது குறித்து கிருஷ்ணவேணி கொடுத்த புகாரின் பேரில் உறையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 18 Dec 2021 5:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    போலரைஸ்டு சன்கிளாஸ்ல அப்படி என்னதான் ஸ்பெஷல்?
  2. திருப்பூர்
    திருப்பூா் தொகுதி தோ்தல் வாக்கு எண்ணும் பணி; 1,274 முகவா்கள் நியமனம்
  3. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் திடீர் கோடை மழை!விவசாயிகள் பெரு மகிழ்ச்சி!
  4. லைஃப்ஸ்டைல்
    அன்பையும், அர்ப்பணிப்பையும் கொண்டாடும் "வயிர கல்யாணம்"
  5. காஞ்சிபுரம்
    திருமுக்கூடல் ஸ்ரீ செல்லியம்மன் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  6. திருப்பூர்
    ஜவுளி உற்பத்தியாளா்கள் ஒப்பந்த கூலியை வழங்க நடவடிக்கை எடுக்க...
  7. லைஃப்ஸ்டைல்
    ஆண்களுக்கான சரியான சன்கிளாஸ் தேர்வு செய்வது எப்படி?
  8. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் புண்ணிய கோடீஸ்வரர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  9. நாமக்கல்
    வைகாசி மாத முதல் ஞாயிற்றுக்கிழமை ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரம்
  10. லைஃப்ஸ்டைல்
    சரஸ்வதி பூஜையின் தோற்றமும் வாழ்த்துக்களும்