/* */

திருச்சி ஆயுதப்படை மைதானத்தில் 73-வது குடியரசு தினவிழா கொண்டாட்டம்

73-வது குடியரசு தின விழாவை முன்னிட்டு திருச்சி ஆயுதப்படை மைதனாத்தில் மாவட்ட கலெக்டர் சிவராசு தேசிய கொடியை ஏற்றினார்.

HIGHLIGHTS

திருச்சி ஆயுதப்படை மைதானத்தில் 73-வது குடியரசு தினவிழா கொண்டாட்டம்
X

திருச்சி மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் நடந்த விழாவில் தேசிய கொடி  ஏற்றினார் கலெக்டர் சிவராசு.

இந்தியாவின் 73 - வது குடியரசு தின விழா நாடு முழுவதும் இன்று கொண்டாடப்பட்டது.

அதன் ஒரு பகுதியாக திருச்சி ஆயுதப்படை மைதானத்தில் இன்று காலை நடந்த குடியரசு தின விழாவில் திருச்சி மாவட்ட கலெக்டர் சிவராசு தேசிய கொடியை ஏற்றி வைத்தார்.

தொடர்ந்து வண்ண பலூன்களை பறக்க விட்டார். அதன் பின் நடந்த காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை மாவட்ட கலெக்டர் சிவராசு ஏற்றுக்கொண்டார். பின்னர் சிறப்பாக பணியாற்றிய 130 காவலர்களுக்கு பதக்கம் வழங்கப்பட்டது.

மேலும், சிறப்பாக பணிபுரிந்த அரசு அலுவலர்கள் 489 பேருக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. இதையடுத்து எப்போதும் நடைபெறுவது போல இல்லாமல், இந்த வருடம் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெறவில்லை.

Updated On: 26 Jan 2022 2:12 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    மகன், தந்தைக்கு சேர்க்கும் புகழ் எது தெரியுமா?
  2. லைஃப்ஸ்டைல்
    மனித உணர்ச்சிகளின் நுணுக்கங்களையும் வெளிப்படுத்தும் நா. முத்துக்குமார்...
  3. லைஃப்ஸ்டைல்
    மனதைத் திறப்பது: பாசம் வழியான பயணம்
  4. லைஃப்ஸ்டைல்
    "நான் உன்னை மிகவும் நேசிக்கிறேன்": கைவசப்படுத்தும் காதல் மேற்கோள்கள்
  5. குமாரபாளையம்
    அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் விண்ணப்பங்கள் பதிவு...
  6. நாமக்கல்
    நாமக்கல் டிரினிட்டி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் 10ம் வகுப்பு...
  7. தமிழ்நாடு
    புதிய ‘லே அவுட்’ அனுமதியை நிறுத்த முடியாது..!
  8. வால்பாறை
    பொள்ளாச்சியில் கனமழை காரணமாக ஒரு இலட்சம் வாழைகள் சேதம்
  9. இந்தியா
    உலக அளவிலான மாற்றம் : புலிப்பாய்ச்சலில் இந்தியா..!
  10. லைஃப்ஸ்டைல்
    ‘குடும்பத்தில் சுயநலம் பெருகினால், உறவுகள் விலகிப் போகும்’