திருச்சியில் மாணவியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த 7 பேர்

திருச்சியில் மாணவியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த 7 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
திருச்சி கொட்டப்பட்டு பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமிக்கு திடீர் என வயிற்று வலி ஏற்பட்டது. இதுபற்றி அந்த சிறுமி தனது தாயாரிடம் கூறி உள்ளார். உடனே தாயார் மகளை அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். டாக்டர்கள் பரிசோதித்து விட்டு அந்த சிறுமி மூன்று மாத கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்தனர்.
இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த தாயார் மகளிடம் கேட்டபோது, தன்னை ஒரு வாலிபர் ரயில்வே குடியிருப்பில் வைத்து பலாத்காரம் செய்ததாக தெரிவித்தார். இது தொடர்பாக அந்த சிறுமியின் தாயார் திருச்சி பொன்மலை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் அந்த வாலிபரை பிடித்து விசாரிக்கும் போது, மேலும் 6 பேர் அந்த சிறுமியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த அதிர்ச்சி தகவல் கிடைத்துள்ளது. இது குறித்து ஏழு பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்சி கொட்டப்பட்டில் மாணவி கூட்டு பலாத்காரத்தில் சிக்கி இருப்பது மாநகர காவல் துறையை அதிர்ச்சி அடைய வைத்து உள்ளது. கூட்டு பலாத்காரத்தில் மாணவி சிக்கியது எப்படி? எப்படி அவர்களிடம் ஏமாந்தார். இதில் குற்றம்சாட்டப்பட்டுள்ள நபர்களின் பின்னணி என்ன? என்பது பற்றி போலீசார் தீவிர புலன் விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் மாணவியின் கர்ப்பத்திற்கு ஏழு பேரில் காரணமான நபர் யார்? என்பதை அறிய கோர்ட்டு அனுமதி பெற்று அந்த சிறுமியை மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பவும் போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu