திருச்சியில் லாட்டரி சீட்டு விற்பனை செய்த 6 பேர் கைது: போலீசார் அதிரடி

திருச்சியில் லாட்டரி சீட்டு விற்பனை செய்த 6 பேர் கைது: போலீசார் அதிரடி
X

பைல் படம்.

திருச்சி மாநகரில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்ற 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருச்சி மாநகரில் தடைசெய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்கப்படுவதாக போலீஸ் கமிஷனர் கார்த்திகேயனுக்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து போலீஸ் கமிஷனர் உத்தரவின் பேரில், திருச்சி காந்திமார்க்கெட், கன்டோன்மென்ட், கோட்டை, ஸ்ரீரங்கம் உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

இதில் லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்ததாக பாலக்கரையை சேர்ந்த கோபிநாத், சந்தோஷ் முருகவேல், கோட்டை பகுதியில் உள்ள கீழதேவதானம் பகுதியைச் சேர்ந்த அருண், ராணிதெருவைச் சேர்ந்த லோகநாதன், எடத் தெருவைச் சேர்ந்த பீட்டர் சபரிநாதன், ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த ரமேஷ் ஆகிய 6 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து செல்போன்கள் மற்றும் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

Tags

Next Story
why is ai important to the future