/* */

திருச்சி ரயில் நிலையத்தில் வடமாநிலத்தை சேர்ந்த 5 சிறுவர்கள் மீட்பு

திருச்சி ரயில் நிலையத்தில் 5 சிறுவர்களை மீட்டு பெற்றோருக்கு தகவல் தெரிவித்து வரவழைத்து ஒப்படைக்க போலீசார் முயற்சித்தனர்.

HIGHLIGHTS

திருச்சி ரயில் நிலையத்தில் வடமாநிலத்தை சேர்ந்த  5 சிறுவர்கள் மீட்பு
X

திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையம்.

திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது ஹவுராவில் இருந்து திருச்சி வந்த ரயிலில் சோதனை மேற்கொண்ட போது, சந்தேகப்படும் வகையில் இரயிலில் இருந்த 16 வயதுடைய 2 சிறுவர்கள், 15 வயது சிறுவன் ஒருவன், 14 வயது சிறுவன் ஒருவன், 17 வயது சிறுவன் ஒருவன் என மொத்தம் 5 சிறுவர்கள், ஒரு பெட்டியில் உட்கார்ந்து இருந்தனர்.

உடனே அவர்கள் 5 பேரையும் பிடித்த போலீசார் விசாரணை செய்த போது, அவர்களில் 4 பேர் மேற்குவங்க மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பதும், ஒருவர் பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. மேலும் இவர்கள் திருப்பூரில் உள்ள ஒரு பனியன் கம்பெனிக்கு வேலைக்காக ரயிலில் புறப்பட்டு வந்தது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து 5 பேரையும் மீட்ட ரயில்வே பாதுகாப்பு படையினர், ஒரு காப்பகத்தில் ஒப்படைத்ததுடன், 5 சிறுவர்களின் பெற்றோருக்கும் தகவல் தெரிவித்து வரவழைத்துள்ளனர்.

Updated On: 20 Feb 2022 1:30 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  2. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  3. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  4. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  5. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  7. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  8. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?