/* */

திருச்சி ஹோலிகிராஸ் கல்லூரியில் 48 மணிநேர உலக சாதனை தொடர் கவியரங்கம்

திருச்சி ஹோலிகிராஸ் கல்லூரியில் "48 மணிநேர உலக சாதனை தொடர் கவியரங்கம்" இணைய வழியில் தொடங்கி நடந்தது.

HIGHLIGHTS

திருச்சி ஹோலிகிராஸ் கல்லூரியில் 48 மணிநேர உலக சாதனை தொடர் கவியரங்கம்
X
திருச்சி ஹோலிகிராஸ் கல்லூரி (கோப்பு படம்)

அரியலூர் தமிழ் அமுது அறக்கட்டளை மற்றும் திருச்சி புனித சிலுவை தன்னாட்சி கல்லூரி தமிழாய்வுத்துறை இணைந்து நடத்தும் "48 மணிநேர உலக சாதனை தொடர் கவியரங்கம்" நேற்று 23-ந்தேதி தொடங்கி இன்று 24-ந்தேதி வரை"உலகின் உன்னத உறவு" எனும் தலைப்பில் இணையவழியே தொடர்ந்து நடைபெற்றது.

இந்த விழாவிற்கு புனித சிலுவை தன்னாட்சி கல்லூரி முதல்வர் முனைவர் கிறிஸ்டினா பிரிஜித் தலைமை தாங்கினார். கல்லூரி செயலர் முனைவர் ஆனி சேவியர் முன்னிலை வகித்தார். கல்லூரி தமிழாய்வுத்துறைத் தலைவர் முனைவர் ஜெஸின் பிரான்சிஸ் வாழ்த்துரை வழங்கினார். இந்த நிகழ்ச்சிக்கு தஞ்சை மன்னர் சரபோஜி அரசுக் கல்லூரியின் தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர், முனைவர் மதுரை சந்திரன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு சிறப்புரை வழங்கினார்.

இந்த இணைய வழி நிகழ்ச்சியில் புனித சிலுவை தன்னாட்சிக் கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் மாணவியர், பிற கல்லூரி மாணவ மாணவிகள், பொதுநிலையினர் ஆகியோர் கலந்துகொண்டு கவிபாடினர். இதற்கான இணைய வழி ஏற்பாடுகளை முனைவர்கர் ஜெஸிந்தாராணி, பிரேமா, தேவதா, சுஜாதா ஆகியோர் செய்திருந்தனர். இதன் நிறைவு விழா நாளை 25-ந்தேதி காலை 9 மணியளவில் நடைபெறவுள்ளது.

Updated On: 24 Oct 2021 12:45 PM GMT

Related News

Latest News

  1. பொன்னேரி
    பெருமாள் - சிவன் நேருக்கு நேர் சந்திக்கும் ஹரிஹரன் சந்திப்பு விழா
  2. லைஃப்ஸ்டைல்
    நிமிர்ந்து நில்..! மலைகூட மடுவாகும்..!
  3. லைஃப்ஸ்டைல்
    இதயத்தைத் தொடும் 15வது திருமண நாள் வாழ்த்துகள்
  4. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் இனிமையை தேட புத்த மொழிகள்!
  5. ஈரோடு
    மாணவர் மீது தாக்குதல்: ஈரோடு தனியார் பொறியியல் கல்லூரி நிர்வாகம் மீது...
  6. ஆவடி
    அடுக்குமாடி குடியிருப்பில் தவறி விழுந்த குழந்தையை காப்பாற்றும் வீடியோ...
  7. வானிலை
    ஊட்டிக்கே இந்த நிலைமைனா? மத்த ஊரை யோசித்து பாருங்க!
  8. வணிகம்
    கடன் தொல்லையில்லாமல் வாழ இப்படி ஒரு வழி இருக்கா?
  9. வணிகம்
    பணத்தை இப்படி சேமித்தால்.... ஓஹோன்னு வாழலாம்...! எப்படி?
  10. மயிலாடுதுறை
    அரபிக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா..!