/* */

திருச்சி நகரில் குற்றச்சம்பவங்களில் தொடர்புடைய ரவுடிகள் 33 பேர் கைது

வாக்கு எண்ணிக்கையின்போது சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படாமல் இருக்க ரவுடிகள் 33 பேர் ஒரே நாளில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

HIGHLIGHTS

திருச்சி நகரில் குற்றச்சம்பவங்களில் தொடர்புடைய ரவுடிகள் 33 பேர் கைது
X

திருச்சி மாநகரத்தில்சட்டம், ஒழுங்கை பாதுகாக்கவும், குற்றச்சம்பவங்கள் ஏதும் நடைபெறாதவாறு முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளவும், தீவிர வாகன தணிக்கை மேற்கொள்ளவும், குற்றவாளிகள்மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்க போலீஸ் கமிஷனர் ஜி.கார்த்திகேயன் உத்தரவிட்டிருந்தார்.

19.02.2022- ந்தேதி நடந்த வாக்குப்பதிவில் பதிவான வாக்குகள் நாளை எண்ணப்படுவதால்வாக்கு எண்ணிக்கையின்போது எவ்வித அசம்பாவிதங்களும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதர்காகவும், அமைதியான முறையில் வாக்கு எண்ணிக்கைநடைபெறுவதற்காகவும், பல்வேறு வழக்குகளில் சம்பந்தப்பட்டமற்றும் பிரச்சனை ஏற்படுத்தக்கூடிய போக்கிரிகள் மீது நடவடிக்கை எடுக்க திருச்சி மாநகரத்தில் உள்ளதுணை ஆணையர்கள் மற்றும் ஆணையர்களுக்கும் அறிவுரைகள் வழங்கியுள்ளார்.

அதன்பேரில் திருச்சி மாநகரத்தில் கண்டோன்மென்ட் சரகத்தில் 7 ரவுடிகளும், கே.கே.நகர் சரகத்தில் 3 ரவுடிகளும். பொன்மலை சரகத்தில் 7 ரவுடிகளும், ஸ்ரீரங்கம் சரகத்தில் 6 ரவுடிகளும், காந்தி மார்க்கெட் சரகத்தில் 7 ரவுடிகளும், தில்லைநகர் சரகத்தில் 3 ரவுடிகளும் ஆக மொத்தம் இன்று ஒரே நாளில் 33 குற்ற பின்னணியில் உள்ள ரவுடிகள் கைது செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் வாக்கு எண்ணிக்கையின்போது பிரச்சினை ஏற்படுத்தக்கூடிய நபர்கள் கண்டறிந்து கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள்,

திருச்சி மாநகரில் வாக்கு எண்ணிக்கையில் பிரச்சனை ஏற்படாமல் இருக்க குற்ற பிண்ணனி உள்ள ரவுடிகள் மீது சட்டரீதியான நடவடிக்கை தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Updated On: 21 Feb 2022 4:00 PM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் மாவட்டத்தில் பிளஸ் 1 தேர்வில் 92.58 சதவீதம் மாணவர்கள்...
  2. சோழவந்தான்
    உலக நன்மைக்காகவும் மழை வேண்டியும் சோழவந்தானில் யாகம்..!
  3. திருத்தணி
    சரக்கு வாகன ஓட்டுனரை வெட்டி வழிப்பறியில் ஈடுபட்ட கொள்ளையன் கைது
  4. சோழவந்தான்
    சோழவந்தான் திரௌபதியம்மன் ஆலயத்தில் திருக்கல்யாண விழா..!
  5. நத்தம்
    நத்தம் பகவதி அம்மன் திருவிழா: காப்புக்கட்டுடன் தொடங்கியது..!
  6. கோவை மாநகர்
    காந்திபுரத்தில் பேருந்து மோதி தொழிலாளி பலி..!
  7. லைஃப்ஸ்டைல்
    எனக்கு தாலாட்டு பாடிய 'இரண்டாம் தாய்' அக்காவுக்கு பிறந்தநாள்...
  8. லைஃப்ஸ்டைல்
    ஆசையுடன் அப்பாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  9. வீடியோ
    Bhagyaraj மருமகளுடன் குத்தாட்டம் போட்ட Gayathri Raghuram ! #dance...
  10. லைஃப்ஸ்டைல்
    ரமலான் வாழ்த்துச் சொல்வோம் வாங்க..!