திருச்சி அரசு மருத்துவமனையில் புத்தாண்டில் பிறந்த குழந்தைகள்

திருச்சி அரசு மருத்துவமனையில் புத்தாண்டில் பிறந்த குழந்தைகள்
X

புத்தாண்டில் பிறந்த குழந்தையுடன் பெற்றோர் மற்றும் மருத்துவர் 

திருச்சி அரசு மருத்துவமனையில் புத்தாண்டு அன்று 32 குழந்தைகள் பிறந்தன

திருச்சி அரசு மருத்துவமனையில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பொதுமக்கள் சிகிச்சை பெற்று செல்கின்றனர். இதில் மகப்பேறு பிரிவில் கர்ப்பிணிகள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இங்கு தினமும் சுமார் 30 குழந்தைகள் வரை பிறக்கின்றன.

இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு ஆங்கில புத்தாண்டு பிறந்தது. நள்ளிரவு 12 மணி முதல் நேற்று இரவு 8 மணி வரை, திருச்சி அரசு மருத்துவமனையில் மகப்பேறு பிரிவில் புத்தாண்டு அன்று மட்டும் 32 குழந்தைகள் பிறந்தன. அவற்றில் 13 ஆண் குழந்தை, 19 பெண் குழந்தைகள் ஆவர்.

குறிப்பாக நள்ளிரவு 12 மணி முதல் 1 மணிக்குள் 2 குழந்தைகள் பிறந்திருந்தன. புத்தாண்டு தினத்தில் புதுமலர்களைப்போல குழந்தைகள் பிறந்ததால், பெற்றோர் மற்றும் உறவினர்கள் மகிழ்ச்சியில் திளைத்தனர். அவர்கள், செவிலியர், டாக்டர் உள்ளிட்டவர்களுக்கு சாக்லெட், கேக் கொடுத்து மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டதுடன் புத்தாண்டு வாழ்த்துகளையும் தெரிவித்தனர். அந்த குழந்தைகள் இனி ஒவ்வொரு ஆண்டும் ஆங்கில புத்தாண்டு அன்று பிறந்தநாளையும் கொண்டாடுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story
ai in future agriculture