திருச்சியில் ஓடும் பஸ்சில் 24 பவுன் நகைகள் திருட்டு

திருச்சியில் ஓடும் பஸ்சில் 24 பவுன் நகைகள் திருட்டு
X
திருச்சியில், ஓடும் பஸ்சில் 24 பவுன் நகைகள் திருட்டு போனதாக போலீசில் புகார் செய்யப்பட்டு உள்ளது.

கோவை மாவட்டம் காமராஜ்ரோடு ராமானுஜ நகரை சேர்ந்தவர் பாஸ்கரன் (வயது 57). இவர் கடந்த மாதம் வேலை நிமித்தமாக திருச்சிக்கு வந்து விட்டு மீண்டும் கோவை செல்வதற்காக திருச்சி மத்திய பஸ் நிலையத்தில் நின்று கொண்டு இருந்தார். சிறிது நேரத்தில் கோவை செல்லும் அரசு பஸ்சில் ஏறி அமர்ந்தார். அங்கு தனது இருக்கைக்கு அருகே பையை வைத்து இருந்தார்.

கோவை சென்ற பிறகு பையை திறந்து பார்த்த போது, அதில் இருந்த 24 பவுன் நகைகள் திருட்டு போய் இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் கோவை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். ஆனால் கோவை போலீசார் திருச்சியில் புகார் அளிக்கும் படி கூறினார்கள். இதையடுத்து அவர் கண்டோன்மெண்ட் குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags

Next Story
ai in future agriculture