/* */

திருச்சியில் சாலையோரத்தில் கிடந்த 20 மூட்டை கடத்தல் ரேஷன் அரிசி

திருச்சியில் சாலையோரத்தில் அனாதையாக கிடந்த 20 மூட்டை ரேசன் அரிசியை போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.

HIGHLIGHTS

திருச்சியில் சாலையோரத்தில் கிடந்த 20 மூட்டை  கடத்தல் ரேஷன் அரிசி
X

திருச்சியில் சாலையோரம் அனாதையாக கிடந்த ரேஷன் அரிசி மூட்டைகளை போலீசார் கைப்பற்றி சரக்கு வாகனத்தில் ஏற்றி சென்றனர்.

திருச்சி பீமநகர் நியூ ராஜா காலனி பகுதியில் அரிசி மூட்டைகள் கிடப்பதாக செசன்ஸ் கோர்ட் காவல் நிலைய போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் அங்கு ரோட்டோரத்தில் கிடந்த அரிசி மூட்டைகளை கைப்பற்றி அவை யாருடையது என்பது குறித்து விசாரணை நடத்தினர். அந்த மூட்டைகளை போலீசார் பிரித்து பார்த்த போது அந்த மூட்டைகளில் ரேஷன் அரிசி இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது.

இது குறித்து உணவு பொருள் கடத்தல் பிரிவு போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. அங்கு வந்த உணவு பொருள் கடத்தல் பிரிவு போலீசார் ரோட்டில் கேட்பாரற்று கிடந்த 400 கிலோ எடையிலான 20 மூட்டைகள் ரேஷன் அரிசியை கைப்பற்றி, அந்த இடத்திற்கு கொண்டுவந்து போட்டது யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 17 Dec 2021 7:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே வலி நிவாரணி எண்ணெய் தயாரிப்பது எப்படி?
  2. லைஃப்ஸ்டைல்
    வெறும் வயிற்றில் கற்றாழை சாறு அருந்துவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி...
  3. ஆன்மீகம்
    பழனியில் வரும் ஆகஸ்ட் மாதத்தில், உலக முருக பக்தர்கள் மாநாடு
  4. லைஃப்ஸ்டைல்
    பெண்களுக்கு 7 மணி நேர தூக்கம் போதுமா..? ஆய்வு என்ன சொல்லுது?
  5. லைஃப்ஸ்டைல்
    இரவில் சாப்பிடுவதால் உடல் பருமனை அதிகரிக்கும் 5 உணவுகள் என்னென்ன...
  6. லைஃப்ஸ்டைல்
    சுவையான வத்தக்குழம்பு செய்வது எப்படி?
  7. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் தேனின் மருத்துவ குணங்களை தெரிஞ்சுக்குங்க!
  8. தென்காசி
    10ம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ,மாணவிகளுக்கு பாராட்டு...
  9. சுற்றுலா
    அண்டார்டிகாவில் ஒழுங்குபடுத்தப்பட்ட சுற்றுலா: சுற்றுச்சூழலை காப்பாற்ற...
  10. லைஃப்ஸ்டைல்
    பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்வது ஆபத்து! ஹார்வர்ட் பல்கலைகழக ஆய்வு