/* */

தபால் நிலையங்களில் ஆதார் பதிவு செய்ய 2 நாள் சிறப்பு முகாம்

ஸ்ரீரங்கம் கோட்ட தபால் நிலையங்களில் ஆதார் பதிவு 11, 25-ம் தேதிகளில் சிறப்பு முகாம் நடக்கிறது.

HIGHLIGHTS

தபால் நிலையங்களில் ஆதார் பதிவு செய்ய 2 நாள் சிறப்பு முகாம்
X

இந்திய தபால்துறை சார்பில் பொதுமக்களின் தேவையை கருத்தில் கொண்டு, ஆதார் பதிவு தபால் நிலையங்களிலேயே செய்யப்படுகிறது.

ஸ்ரீரங்கம் தபால் கோட்டத்தில், ஸ்ரீரங்கம், துறையூர், பெரம்பலூர் தலைமை தபால் நிலையங்கள் உட்பட 33 தபால் நிலையங்களில் ஆதார் பதிவு மையங்கள் செயல்பட்டு வருகின்றன.

இந்த மையங்களில், நாளை 11-ந்தேதி மற்றும் 25-ம்தேதிகளில் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. முகாம்களில், புதிதாக ஆதார் பதிவு, பழைய ஆதாரில் செல்போன் எண் மாற்றம் போன்ற திருத்தங்கள் உட்பட ஆதார் சம்பந்தமான அனைத்து சேவைகளையும் மேற்கொள்ளலாம். புதிதாக ஆதார் பதிவு செய்ய கட்டணம் இல்லை, பழைய ஆதாரில் திருத்தங்கள் செய்ய வரி உட்பட ரூ.50-ம், பயோ மெட்ரிக் திருத்தங்கள் செய்ய வரி உட்பட ரூ.100 செலுத்த வேண்டும். பொதுமக்கள் தபால்துறையின் இந்த சேவைகளை பயன்படுத்திக் கொள்ளலாம். இத்தகவலை, ஸ்ரீரங்கம் தபால் கோட்ட கண்காணிப்பாளர் விஜயா தெரிவித்துள்ளார்.

Updated On: 10 Jan 2022 5:54 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  2. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  3. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  4. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  5. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  7. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  8. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?