திருச்சி மாநகராட்சி பகுதி முழுவதும் மே 18ம்தேதி குடிநீர் வினியோகம் ரத்து

திருச்சி மாநகராட்சி ஆணையர் வைத்திநாதன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட ஸ்ரீரங்கம் மேலூர் ஆண்டவர் ஆசிரமம் பகுதியில் அமைந்துள்ள நீர் சேகரிப்பு கிணறு எண் ஒன்று, இரண்டு, மூன்று, தரைமட்ட நீர் தேக்க தொட்டி மற்றும் ஆளவந்தான் படித்துறை நீர் சேகரிப்பு நிலையங்களுக்காக உள்ள ஸ்ரீரங்கம் 110 கே.வி. துணை மின் நிலையத்தில் மின்வாரியத்தால் பராமரிப்பு பணிகள் 17 -5- 2023 அன்று காலை 9 45 மணி முதல் மாலை 4 மணி வரை மேற்கொள்ளப்பட உள்ளதால் மின் விரியோகம் இருக்காது. எனவே மண்டலம் 1 மேலூர் தேவி ஸ்கூல், பாலாஜி அவன்யூ ,பெரியார் நகர், திருவானைக்காவல், அம்மா மண்டபம் ஏ.ஐ.பி.இ.ஏ. நகர், தேவதானம், மண்டலம் 2 விறகுபேட்டை புதியது, சங்கிலியாண்டபுரம் புதியது, சங்கிலியாண்டபுரம் பழையது, கல்லுக்குளி புதியது, கல்லுக்குழி பழையது, சுந்தரராஜ நகர் புதியது சுந்தரராஜநகர் பழையது, காஜாமலை புதியது, மண்டலம் 3 அரியமங்கலம் கிராமம், அரியமங்கலம், உக்கடை தெற்கு, ஜெகநாதபுரம் புதியது, ஜெகநாதபுரம் பழையது, மலையப்பன் நகர் புதியது, மலைப்ப நகர் பழையது ரயில் நகர், புதியது ரயில் நகர் பழையது, மகாலட்சுமி நகர் முன்னாள் ராணுவத்தினர் காலனி புதியது, முன்னாள் ராணுவத்தினர் காலனி பழையது,எம். கே. கோட்டை செக்சன் ஆபீஸ் எம்.கே. கோட்டை நாகம்மை வீதி. எம்.கே. கோட்டை நூலகம். பொன்னேரிபுரம் புதியது, பொன்னேரிபுரம் பழையது, பொன்மலைப்பட்டி ஐஸ்வர்யா நகர், மண்டலம் 4 ஜே,கே, நகர், செம்பட்டு ,காமராஜ் நகர், எல்,ஐ,சி, புதியது எல்ஐசி சுப்ரமணியன் நக,ர் தென்றல் நகர் புதியது, தென்றல் நகர் பழையது, தென்றல் நகர் இ.பி. காலனி. வி. என். நகர். புதியது,வி.என். நகர் பழையது, கே. கே. நகர் சுப்பிரமணிய நகர், சுப்ரமணிய நகர் பழையது, சாத்தனூர், பஞ்சப்பூர் ,அம்மன் நகர், கவி பாரதி நகர் எடமலைப்பட்டி புதூர் புதியது, காஜாமலை பழையது, கிராப்பட்டி புதியது ,கிராப்பட்டி பழையது ,அன்பு நகர் பழையது, அன்பு நகர் புதியது, ரங்கா நகர்
மண்டலம் 5 மங்களம் நகர், சிவா நகர், உறையூர் புதியது, உறையூர் பழையது, பாத்திமா நகர், ரெயின்போ நகர், செல்வா நகர், ஆனந்தம் நகர் பாரதி நகர் மற்றும் புத்தூர் பழைய உயர்நிலை நீர் தேக்க தொட்டிகளுக்கு 18/5/2023 அன்று குடிநீர் வினியோகம் நடைபெறாது மறுநாள் 19 5 2023 அன்று வழக்கம் போல் குடிநீர் வினியோகம் செய்யப்படும் எனவே பொதுமக்களுக்கு இதனால் ஏற்படும் சிரமத்தை பொறுத்து மாநகராட்சியுடன் ஒத்துழைக்குமாறும் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu