திருச்சி மாவட்டத்தில் நேற்று புதிதாக 184 பேர் கொரோனா பாதிப்பு

திருச்சி மாவட்டத்தில் நேற்று புதிதாக 184 பேர் கொரோனா பாதிப்பு

பைல் படம்.

திருச்சி மாவட்டத்தில் நேற்று புதிதாக 184 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

திருச்சி மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவலின் தாக்கம் கடந்த சில நாட்களாக குறைந்து இருந்தது. தற்போது பரவல் அதிகரிக்க தொடங்கி இருக்கிறது.

அந்தவகையில் திருச்சி மாவட்டத்தில் நேற்று புதிதாக 184 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையே கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்த 34 பேர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு நேற்று வீடு திரும்பினர்.

திருச்சியில் கொரோனா தொற்றுக்கு நேற்று உயிரிழப்பு இல்லை. தற்போது வரை 491 பேர் கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதன்மூலம் திருச்சி மாவட்டத்தில் இதுவரை மொத்த கொரோனா பாதிப்பு 79 ஆயிரத்து 363 ஆக உள்ளது. இதுவரை கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 1,104 ஆக உள்ளது.

Tags

Next Story