திருச்சி மாநகராட்சி 12-வது வார்டு வேட்பாளர் பாலமுருகன் வாக்கு சேகரிப்பு

திருச்சி மாநகராட்சி 12-வது வார்டு வேட்பாளர் பாலமுருகன் வாக்கு சேகரிப்பு
X

திருச்சி 12வது வார்டு சுயேச்சை வேட்பாளர் பாலமுருகன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

திருச்சி மாநகராட்சி 12-வது வார்டு சுயேட்சை வேட்பாளர் பாலமுருகன் தென்னை மரம் சின்னத்திற்கு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திருச்சி மாநகராட்சி 12-வது வார்டில் சுயேட்சை வேட்பாளராக கோ. பாலமுருகன் தென்னை மரம் சின்னத்தில் போட்டியிடுகிறார். வேட்புமனு தாக்கல் செய்தது முதல் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட பாலமுருகன் இன்று வரை பம்பரமாக தனது ஆதரவாளர்களுடன் வீடு, வீடாக சென்று தேர்தல் வாக்குறுதிகளை துண்டு பிரசுரமாக வழங்கி வாக்கு சேகரித்து வருகிறார்.

பாலமுருகன் ஏற்கனவே இந்த பகுதியில் கடந்த 15 வருடங்களுக்கும்மேலாக மக்கள்சேவையில் இருந்துவருகிறார். இந்நிலையில் இன்று காவேரி நகர், பழைய கரூர் ரோடு, சுப்பிரமணிய சுவாமி கோயில் தெரு ஆகிய பகுதிகளில் ஓட்டு கேட்டு பிரசாரத்தில் ஈடுபட்டார்.


அப்போது அவருடன் குடமுருட்டி கண்ணன், முன்னாள் கவுன்சிலர் முருகேசன், பஜார் மைதீன், மொய்தீன், சாகுல், சிந்தை கந்தன், பழக்கடை செந்தில், தண்ணீர்மலை, மணிகார்ஸ் செந்தில், ராதா, பெரோஸ், உள்ளிட்டஅப்பகுதியைச் சேர்ந்தஇளைஞர்கள், பெண்கள் உட்பட ஏராளமானோர் உடனிருந்தனர்.

Tags

Next Story
ai in future agriculture