துறையூர் அருகே காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி கோயில் பூசாரி பலி

துறையூர் அருகே காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி கோயில்  பூசாரி பலி
X

துறையூர் அருகே காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி பலியான பூசாரி உடலை  தீயணைப்பு படையினர் தேடினர்.

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி கோயில் பூசாரி பலியானார்.

திருச்சி மாவட்டம், துறையூர் அருகே சேனப்ப நல்லூர் கிராமம் உள்ளது. இங்கு உள்ள கோயில் பூசாரியாக இருப்பவர் அரிராஜ் (வயது 40). தீபாவளி பண்டிகையைன்று கோயில் நடை திறப்பதற்காகசென்றவர் மாலை கோயில் நடைசாத்திவிட்டு வீடு திரும்பும்போதுவழியில் உள்ள தரை பாலத்தில்கனமழை காரணமாக காட்டாற்று நீர் கரைபுரண்டு ஓடியது.

இதனால்என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்த அரிராஜ் ஆற்றை கடக்கமுயற்சி செய்துள்ளார். அப்போதுஎதிர்பாராத விதமாக காட்டாற்றுவெள்ளம் இவரை அடித்துசென்றுள்ளது. துறையூர் போலீசார்மற்றும் தீயணைப்பு துறை மீட்புக் குழுவினர் அரிராஜை நீண்ட நேரம் தேடிசடலமாக மீட்டனர். இந்த சம்பவம்அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

Tags

Next Story