திருச்சி: துறையூர் அருகே சாராயம், மதுபானம் விற்ற 5 பேர் பிடிபட்டனர்!

திருச்சி: துறையூர் அருகே சாராயம், மதுபானம் விற்ற 5 பேர் பிடிபட்டனர்!
X
திருச்சி மாவட்டடம் துறையூர் அருகே கள்ளச்சாராயம், மதுபானம் விற்பனை செய்த 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருச்சி மாவட்டம் துறையூர், உப்பிலியபுரம் காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் கள்ளச்சாராயம் விற்பனை செய்யப்படுவதாக காவல் துறைக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து துறையூர் காவல்துறை ஆய்வாளர் விதுன்குமார், மற்றும் சப்இன்ஸ்பெக்டர் கலைச்செல்வன் தலைமையிலான காவல்துறையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

அப்போது கள்ளச் சாராயம் மற்றும் மது பாட்டில்களை கள்ளத்தனமாக விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடர்பாக கள்ளச்சாராயம் விற்பனை செய்த நாகநல்லூர் காட்டுக்கொட்டகையை சேர்ந்த நடேசன், நெட்டவேலம்பட்டியை சேர்ந்த மணி, சுப்ரமணி, சதீஸ் ஆகியோரை காவல்துறையினர் கைது செய்தனர்.

கள்ளத்தனமாக மது பாட்டில்கள் பதுக்கி கூடுதல் விலைக்கு விற்பனை செய்த கொப்பம்பட்டியை சேர்ந்த மணிகண்டன் என்பவரையும் காவல்துறையினர் கைது செய்தனர். இவர்களிடமிருந்து 350 லிட்டர் சாராய ஊறல் பறிமுதல் செய்யப்பட்டு அதனை கொட்டி அழிக்கப் பட்டது. 13 லிட்டர் சாராயம், மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டார் 5 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டனர்.

Tags

Next Story
Similar Posts
திருச்சி சுந்தர்ராஜ் நகரில் கொண்டாடப்பட்ட பல்சமய நல்லுறவு தீபாவளி திருவிழா
சாலை விபத்தில் உயிரிழப்பு ஏற்படுத்திய டிரைவருக்கு சிறை மற்றும் அபராதம்
பாதுகாப்பாக தீபாவளி கொண்டாடுவது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி
தேவர் உருவ படத்திற்கு திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் மரியாதை
ஆசிரியர்கள் குறைதீர் கூட்டத்தில் பங்கேற்ற தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம்
திமுக கூட்டணியில் எந்த குழப்பமும் இல்லை: இரா. முத்தரசன் பேட்டி
பிளாஸ்டிக் பயன்பாட்டிற்கு எதிராக துணிப்பையில் திருமண அழைப்பிதழ்
கட்டிட தொழிலாளர்களுக்கு ரூ.5 ஆயிரம் வழங்க கோரி ஏடியுசி சார்பில் பதிவு தபால்
திருச்சி அருகே  அதிமுக வின் 53-வது ஆண்டு தொடக்க விழா கொண்டாட்டம்
பாதுகாப்பாக தீபாவளி பண்டிகை கொண்டாடுவது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி
ஆன்லைன் பத்திரப்பதிவு சேவைக்கு login செய்வது எப்படி?
வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை ஏற்பாடு பணிகள்: மேயர் அன்பழகன் ஆய்வு
திருச்சி மாநகராட்சி பகுதியில் அக். 18ம்தேதி குடிநீர் வினியோகம் ரத்து
AI மரங்களை நடவு செய்வதில் புரட்சி: சரியான இடத்தை எப்படி கண்டுபிடிப்பது?