/* */

துறையூரில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்

துறையூரில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

HIGHLIGHTS

துறையூரில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்
X

துறையூரில் உள்ள ஒரு கடையில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரி சோதனை நடத்தினார்.

திருச்சி மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் தங்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் மாவட்ட நியமன அதிகாரி டாக்டர் ரமேஷ்பாபு தலைமையில் துறையூர் பஸ் நிலையம் அருகில் உள்ள ஒரு மொத்த வியாபார கடையில் சோதனை நடத்தினார்கள்.

அப்போது அங்கு தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பான்மசாலா, குட்கா போன்ற புகையிலை பொருட்கள் கழிவறையில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. மொத்தம் ஐந்து கிலோ எடையுள்ள அதனை அவர்கள் பறிமுதல் செய்தனர்.

மேலும் நொச்சியம் பகுதியில் உள்ள இரண்டு கடைகளில் நடத்தப்பட்ட சோதனையில் ஒரு கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. அந்த கடையின் உரிமையாளர்களுக்கு தலா ஐந்தாயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்யும் கடைகளுக்கு அபராதம் விதிக்கப்படுவதோடு சீல் வைக்கப்படும் என மாவட்ட நியமன அதிகாரி எச்சரிக்கை விடுத்து உள்ளார்.

Updated On: 16 Sep 2021 5:46 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    மத்திய அரசின் ஐடி பாதுகாப்பு சட்டம் | இந்தியாவில் Whatsapp சேவை...
  2. லைஃப்ஸ்டைல்
    நீ சென்ற பாதைநோக்கிய பயணத்தில் இருக்கிறேன் நான்..!
  3. சினிமா
    யாரிந்த அக்ஷய் கமல்..? 'குக் வித் கோமாளி' சீசன் 5 போட்டியாளர்..!
  4. சினிமா
    யாரிந்த அன்ஷித்தா..? 'குக் வித் கோமாளி' சீசன் 5 கோமாளி..!
  5. தமிழ்நாடு
    டிஆர்பி தேர்வுக்கு விண்ணப்பிக்க காலக்கெடு நீட்டிப்பு
  6. கோயம்புத்தூர்
    கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட தடைகோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு!
  7. லைஃப்ஸ்டைல்
    காதலில் காத்திருப்பதுகூட ஒரு தனி சுகமே..!
  8. வானிலை
    அடுத்த 5 நாட்களுக்கு தமிழ்நாட்டில் வெப்ப அலை வீச வாய்ப்பு! வானிலை...
  9. தமிழ்நாடு
    சேதமான அரசுப் பேருந்துகளை 48 மணி நேரத்தில் ஆய்வு செய்ய உத்தரவு!
  10. லைஃப்ஸ்டைல்
    செண்பகச்சேரி லக்ஷ்மி நரசிம்மர் கோயில் பால்குட திருவிழா..!