/* */

துறையூர் அருகே வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட விவசாயி பிணமாக மீட்பு

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட விவசாயி பிணமாக மீட்கப்பட்டார்.

HIGHLIGHTS

துறையூர் அருகே வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட விவசாயி பிணமாக மீட்பு
X
துறையூர் ஆற்றில் பிணமாக மீட்கப்பட்ட விவசாயி பெரியசாமி.

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள கிருஷ்ணாபுரம் என்ற கிராமத்தை சேர்ந்தவர் பெரியசாமி (வயது 75). விவசாயியான இவர் நேற்று முன்தினம் தோட்டத்துக்கு சென்று திரும்பிய போது, கீழ் ஆற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டார். தகவல் அறிந்த துறையூர் தீயணைப்பு நிலைய அலுவலர் அறிவழகன் தலைமையிலான வீரர்கள் தேடும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் அவர் கிடைக்கவில்லை.

இந்த நிலையில் நேற்று மீண்டும் தேடுதல் பணியில் ஈடுபட்டனர். அப்போது, அவர் ஆற்றில் பிணமாக கண்டெடுக்கப்பட்டார். பின்னர் அவரது உடலை குடும்பத்தினரிடம் ஒப்படைத்தனர். இது குறித்து துறையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 28 Nov 2021 10:00 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  2. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  3. கலசப்பாக்கம்
    படவேடு பகுதியில் கனமழையால் வாழை தோட்டங்கள் பாதிப்பு: எம்எல்ஏ ஆய்வு
  4. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை புதிய பேருந்து நிலைய பணிகள்: கூடுதல் தலைமைச் செயலாளர்...
  5. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் அனைத்து துறைகளின் திட்ட செயலாக்கம் குறித்து ஆய்வு...
  6. கலசப்பாக்கம்
    மிருகண்டா அணையின் நீர்மட்டம் உயர வாய்ப்பு
  7. திருவண்ணாமலை
    திடீர் மழையால் குளிர்ந்த அக்னி ஸ்தலம், மக்கள் மகிழ்ச்சி
  8. வந்தவாசி
    சித்திரை மாத கிருத்திகை: வந்தவாசி அருகே 108 பால்குட ஊா்வலம்
  9. குமாரபாளையம்
    குமாரபாளையம் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள்
  10. வீடியோ
    தீவிரவாதிகள் விவகாரத்தில் மீண்டும் அம்பலப்பட்ட Congress ! வைரலாகும்...