துறையூர் அருகே கட்டிட சாரம் சரிந்து விழுந்து 8 தொழிலாளர்கள் காயம்

துறையூர் அருகே கட்டிட சாரம் சரிந்து விழுந்து 8 தொழிலாளர்கள் காயம்

துறையூர் அரசு மருத்துவமனை (பைல் படம்)

துறையூர் அருகே கட்டிட சாரம் சரிந்து விழுந்ததில் 8 தொழிலாளர்கள் காயம் அடைந்தனர்.

துறையூரில் இருந்து ஆத்தூர். செல்லும் ரோட்டில் புதிய திருமண மண்டபம் கட்டப்பட்டு வருகிறது. இதற்காக சாரம் கட்டி தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில் நேற்று அந்த சாரம் திடீரென்று சரிந்து விழுந்தது.

இதில் அங்கு நின்று பணியாற்றிய தொழிலாளர்களான மருவத்தூர் கிராமத்தை சேர்ந்த தனபால் (வயது 42), கீழப்பட்டி கிராமத்தை சேர்ந்த செல்லம்மாள் (வயது 50), நடுவுலி கிராமத்தை சேர்ந்த முத்துலட்சுமி (வயது 40), கீழப்பட்டி கிராமத்தை சேர்ந்த துளசி (வயது 38), சிங்களாந்தபுரம் கிராமத்தை சேர்ந்த சின்னப்பொண்ணு (வயது 47), மருவத்தூர் கிராமத்தை சேர்ந்த மருதமுத்து (வயது 62), செல்லிபாளையம் கிராமத்தை சேர்ந்த குணசேகரன் (வயது 50), வடக்குத் தெரு அம்மா பட்டியை சேர்ந்த ராஜா (வயது 32) ஆகியோர் காயம் அடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக துறையூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப் பட்டுள்ளனர். இது குறித்து துறையூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story