/* */

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே நள்ளிரவில் ஆட்டோ டிரைவர் குத்திக் கொலை

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே நள்ளிரவில் ஆட்டோ டிரைவர் குத்திக் கொலை செய்யப்பட்டார்.

HIGHLIGHTS

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே நள்ளிரவில் ஆட்டோ டிரைவர் குத்திக் கொலை
X

கொலை நடந்த இடத்தில் திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுஜித்குமார் நேரடி விசாரணை நடத்தினார்.

திருச்சி மாவட்டம் துறையூரை அடுத்த ஆலத்துடையான்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பிரபு (வயது 38). இவருக்கு திருமணமாகி உஷா என்ற மனைவியும், தேவி (8) தேவன் (8) ஆகிய இரட்டைக் குழந்தைகளும் மற்றும் நித்ரா (4) என்ற பெண் குழந்தையும் உள்ளனர்.இவர் துறையூரில் வாடகைக்கு ஆட்டோ ஓட்டும் தொழில் செய்து வந்தார்.

நேற்று நள்ளிரவு ஆலத்துடையான்பட்டியில் உள்ள தனது வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த போது, மர்ம நபர் செல்போனில் தொடர்புகொண்டு அழைத்துள்ளார். யார் என்று பார்ப்பதற்காக வீட்டிலிருந்து சுமார் அரை கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்றுள்ளார். அப்போது எம்.ஜி.ஆர்.நகர் அருகே அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் குத்தி கொலை செய்யப்பட்டு ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார். வெளியில் சென்ற கணவன் வெகுநேரமாகியும் வீடு திரும்பாததால் சந்தேகம் அடைந்த மனைவி உஷா கணவரை தேடிச் சென்றுள்ளார்.

அப்போது கணவர் பிரபு ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தவர் உடனடியாக உறவினருக்கு தகவல் கொடுத்தார். மேலும் இது குறித்து தகவலறிந்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுஜித்குமார், முசிறி டி.எஸ்.பி அருள்மணி, துறையூர் காவல் ஆய்வாளர் செந்தில்குமார், உப்பிலியபுரம் எஸ். ஐ. சாந்தகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை செய்தனர்.

பின்னர் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக துறையூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். நள்ளிரவில் கொலை செய்யப்பட்ட ஆட்டோ டிரைவரான பிரபுவுக்கும், வேறு யாருக்கும் ஏற்கனவே முன் விரோதம் இருந்ததா? அல்லது வேறு ஏதும் காரணமா? என போலீசார் விசாரித்து வருகின்றனர்.

நள்ளிரவில் நடந்த இந்த கொலைச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Updated On: 28 Nov 2021 10:25 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நாமக்கல் மாவட்ட கலெக்டர்...
  2. லைஃப்ஸ்டைல்
    பிறந்தோம் சாதிப்போம்..! பிறந்தநாள் வாழ்த்து..!
  3. திருமங்கலம்
    மதுரை சோழவந்தான் அருகே இலந்தை குளம் முத்தம்மாள் கோயில் மகா...
  4. ஈரோடு
    மழை காரணமாக பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 1,468 கன அடியாக அதிகரிப்பு
  5. திருத்தணி
    திருத்தணி அருகே இருசக்கரத்தின் மீது கார் மோதி கணவன், மனைவி உயிரிழப்பு
  6. வீடியோ
    🔴LIVE : முரசு மக்கள் கட்சியின் தலைவர் தேவன் காவல் நிலையங்களின் மீது...
  7. ஈரோடு
    பெருந்துறை பகுதியில் கனமழை: தேசிய நெடுஞ்சாலையில் ஆறாக ஓடிய மழைநீர்
  8. வீடியோ
    BaluMahendra-வை அப்பா போல் கவனித்த Garudan Director !#balumahendra...
  9. வீடியோ
    Vetrimaaran-னிடம் Viduthalai-2 Update கேட்ட ரசிகர்கள் !#vetrimaaran...
  10. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் அருகே பதுக்கி வைக்கப்பட்டிருந்த 2.3 டன் ரேஷன் அரிசி...