/* */

துறையூர் வெடி விபத்து: 4 பேர் நீதிமன்றத்தில் ஆஜர்

துறையூர் வெடி விபத்து: 4 பேர் நீதிமன்றத்தில் ஆஜர்
X

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள முருங்கப்பட்டி கிராமத்தில் வெற்றிவேல் எக்ஸ்ப்ளோசிவ்ஸ் என்ற தனியார் வெடிமருந்து தயாரிப்பு நிறுவனம் செயல்பட்டு வந்தது. கடந்த 2016-ம் ஆண்டு டிசம்பர் 1-ம் தேதி வெடி மருந்து தயாரிப்பு வளாகத்தில் உள்ள ஒரு அரங்கில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. இதில் கட்டிடம் தரை மட்டமானதுடன், அங்கு பணியாற்றிய பலர் இடிபாட்டில் சிக்கியும், உடல் சிதறியும் பலியாகினர். இதில் பலியானோர் எண்ணிக்கை 19 ஆக அரசு அறிவித்து இருந்தது. இந்த வெடி விபத்து குறித்து வெடிபொருள் தயாரிப்பு நிறுவன உரிமையாளரான விஜயக்கண்ணன், மேலாளர்கள் பிரகாசம், ராஜகோபால், பாதுகாப்புப் பிரிவு மேலாளர் ஆனந்தன் உட்பட 4 பேர் மீது 304(2), இந்திய வெடிபொருள் சட்டம் 9 (1)ஏ, 9 (பி)(1)(ஏ), வெடிபொருள் சட்டம் 3, 4(பி), 5 ஆகிய பிரிவுகளில் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்நிலையில் தமிழக அரசு இந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு வழக்கு சம்மந்தமான அனைத்து ஆவணங்களும் சிபிசிஐடி போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது. அதனைத் தொடர்ந்து கடந்த 5-வருடங்களாக நடந்து வந்த வழக்கு விசாரணையில் சிபிசிடி போலீசார் இன்று வெடி விபத்து சம்பந்தமாக 4 பேரையும் அழைத்து வந்தனர். திருச்சி முதலாவது கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் நீதிபதி செல்வம் முன்பு விசாரணை நடந்தது. அரசு தரப்பு வழக்கறிஞர் ராஜேந்தின் மற்றும் எதிர் தரப்பு வழக்கறிஞர் மனோகரன் ஆகியோர் வாதாடினார். அதனைத் தொடர்ந்து இன்று நடந்த வழக்கு விசாரணை முடிவில் வருகிற 23.2.2021 அன்று இந்த வழக்கு சம்பந்தப்பட்ட அனைவரும் ஆஜராகும் படி நிதிபதி உத்தர விட்டார்.

Updated On: 16 Feb 2021 11:13 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அருமையான தோழமைக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்து
  2. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் தினமும் பெய்யும் மழையால் மாயமானது அக்னி நட்சத்திர வெயில்
  3. கல்வி
    தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்தில் பட்ட மற்றும் பட்டய படிப்புகள்
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியத்தில் மந்திரி மாதிரி வாழணுமா? அடிக்கடி முந்திரி
  5. லைஃப்ஸ்டைல்
    தனக்கென வாழாமல் நமக்கென வாழும் தந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்து
  6. தமிழ்நாடு
    மணிக்கு 200 கி. மீ.வேகம்: பறக்கும் டாக்சி தயாரிக்கும் முயற்சியில்...
  7. லைஃப்ஸ்டைல்
    ருசியான சில்லி பரோட்டா செய்வது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    குழம்பு மிளகாய் பொடி வீட்டிலேயே தயார் செய்வது எப்படி?
  9. திருச்சிராப்பள்ளி மாநகர்
    கை நழுவி போகிறதா? திருச்சி பஞ்சப்பூரில் அமைய உள்ள ஒலிம்பிக் அகாடமி
  10. ஆன்மீகம்
    தியாகத் திருநாளாம் பக்ரீத் வாழ்த்து சொல்லலாம் வாங்க