திருச்சி பொன்மலைப்பட்டியில் வாலிபர் ஓட,ஓடவிரட்டி வெட்டிக்கொலை
திருச்சி பொன்மலைப்பட்டியில் கொலை செய்யப்பட்ட வாலிபரின் உடலை போலீசார் ஆம்புலன்சில் ஏற்றினார்கள்.
திருச்சி கொட்டப்பட்டு எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்தவர் சின்ராசு (வயது 21). இவருக்கும் பொன்மலைப்பட்டி பகுதியை சேர்ந்த சிலருக்கும் முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இதன் காரணமாக இன்று இரவு எட்டு மணி அளவில் பொன்மலைப்பட்டி கடை வீதி பகுதியில் சின்ராசு சென்று கொண்டிருந்த போது அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் வந்த நபரால் ஓட, ஓட வெட்டி தலை துண்டித்து படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
இதனை கண்ட அப்பகுதியில் உள்ளவர்கள் அலறி அடித்துக்கொண்டு கடைகளை பூட்டி விட்டு ஓட்டம் பிடித்துள்ளனர். தகவலறிந்த பொன்மலை போலீசார் விரைந்து சென்று இறந்தவரின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.
பொன்மலை ஆட்டோ குழந்தை என்பவரின் மகன் அலெக்ஸ் (வயது 24) என்பவர் முன்விரோதம் காரணமாக சின்ராசுவை வெட்டி கொன்றதாக முதற்கட்ட விசாரணையில் தொிய வந்துள்ளது. அலெக்ஸ் மீது ஏற்கனவே பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதாக தகவல். அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமரா பதிவுகளை போலீசார் ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu