/* */

உலக அயோடின் விழிப்புணர்வு தின நிகழ்ச்சியில் கலெக்டர் சிவராசு பங்கேற்பு

திருச்சி அய்மான் கல்லூரியில் நடந்த உலக அயோடின் விழிப்புணர்வு தின நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் சிவராசு பங்கேற்றார்.

HIGHLIGHTS

உலக அயோடின் விழிப்புணர்வு தின நிகழ்ச்சியில் கலெக்டர் சிவராசு பங்கேற்பு
X

திருச்சி அய்மான் கல்லூரில் உலக அயோடின் தின நிகழ்ச்சி கலெக்டர் சிவராசு தலைமையில் நடந்தது.

திருச்சி அய்மான் பெண்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உலக அயோடின் விழிப்புணர்வு தினம் மாவட்ட கலெக்டர் சிவராசு தலைமையில் நடைபெற்றது.

உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் ரமேஷ்பாபு முன்னிலை வகித்தார். கல்லூரி முதல்வர் டாக்டர் சுஹாஷினி எர்னஸ்ட் வரவேற்புரையாற்றினார். இதில் கலெக்டர் சிவராசு அயோடின் பற்றாக்குறையினால் ஏற்படும் பாதிப்புகள் பற்றியும் அவற்றை எவ்வாறு சரிசெய்வது என்பது குறித்தும் விளக்கி கூறினார்.

மேலும் கலெக்டர் முன்னிலையில் மாவட்ட நியமன அலுவலர் ரமேஷ்பாபு, உப்பில் அயோடின் கண்டறியும் செய்முறை விளக்கத்தை மாணவிகளுக்கு செய்து காண்பித்தார். மேலும், உணவு பொருட்களில் எளிதில் கலப்படத்தை கண்டறியும் முறைகள் பற்றி செயல்முறை விளக்கத்தையும் மாணவியர்களுக்கு செய்து காண்பிக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் அய்மான் பெண்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்கள் சுமார் 200 நபர்கள் பங்கேற்றனர். மேலும் கல்லூரி இயக்குனர் டாக்டர் சாகுல் ஹமீது கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். உப்பு நுகர்வோர் பாதுகாப்பு மாவட்ட தலைவர் டாக்டர் மோகன் கலந்து கொண்டு பேசினார். இந்நிகழ்ச்சியில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் இப்ராஹிம், ஸ்டாலின், வசந்தன், அன்புச்செல்வன், ஜஸ்டின், பாண்டி, சண்முகசுந்தரம் மற்றும் வடிவேல் ஆகியோர் இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

Updated On: 22 Oct 2021 1:00 PM GMT

Related News

Latest News

  1. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  2. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  3. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  5. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  6. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  7. ஈரோடு
    ஈரோட்டில் இன்று (மே.5) 5வது நாளாக 110 டிகிரிக்கு மேல் வெயில் பதிவு
  8. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’
  9. காஞ்சிபுரம்
    நீட் தேர்வில் மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்பு
  10. லைஃப்ஸ்டைல்
    நம்பிக்கையுடன் முன்னேற உதவும் சில எழுச்சியூட்டும் தமிழ் வரிகள்!