திருச்சி திருவெறும்பூரில் டேங்கர் லாரி மோதி இளம்பெண் உயிரிழப்பு

திருச்சி திருவெறும்பூரில் டேங்கர் லாரி மோதி இளம்பெண் உயிரிழப்பு
X
திருச்சி திருவெறும்பூரில், டேங்கர் லாரி மோதி இளம்பெண் பலி. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தஞ்சை மாவட்டம், திருவையாறு அருகே உள்ள உரத்துறையை சேர்ந்தவர் கர்ணன். இவரது மனைவி ராஜலட்சுமி (வயது 30). இவர் திருவெறும்பூரில்உள்ள தனது உறவினர் வீட்டுக்கு வந்துவிட்டு நேற்று மாலையில் வீட்டிற்கு செல்வதற்காக திருவெறும்பூர் பகுதிகளில் காய்கறி வாங்கிக்கொண்டு திருச்சி-தஞ்சை தேசியநெடுஞ்சாலையை கடக்க முயன்றார்.

அப்போது அவர் மீது துவாக்குடி பகுதியில் இருந்து திருச்சி நோக்கி வந்த டீசல் டேங்கர் லாரி மோதியது. இதில் பலத்த காயமடைந்த ராஜலட்சுமியை அருகில் உள்ளவர்கள் மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ராஜலட்சுமி இறந்தார்.இதுகுறித்து திருவெறும்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story