/* */

உள்ளாட்சி தேர்தல்: திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க.வில் இன்று விருப்ப மனு

உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விரும்புவோரிடம் திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் இன்று விருப்ப மனு பெறப்படுகிறது.

HIGHLIGHTS

உள்ளாட்சி தேர்தல்: திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க.வில் இன்று விருப்ப மனு
X

அன்பில் மகேஷ் பொய்யாமொழி

திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளரும், அமைச்சருமான, அன்பில் மகேஸ் பொய்யாமொழி வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

திருச்சி தெற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட, மருங்காபுரி, வையம்பட்டி ஆகிய ஒன்றியங்களில் மருங்காபுரி ஊராட்சி ஒன்றிய வார்டு எண்-10,அமையபுரம் ஊராட்சி, வார்டு எண் -6, ஆகிய இடங்கள் காலியாக உள்ளது.

இதற்கான தேர்தல் வரும் 09.10.2021 அன்று நடைப்பெறுகின்றது.தி.மு.க. சார்பில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுபவர்கள் இன்று காலை 10 மணி முதல் மாலை 5 மணிக்கு விருப்ப மனுக்களை பெற்று அன்று மாலை 7 மணிக்குள் விருப்ப மனுவை பூர்த்தி செய்து மாவட்ட கழகத்தில் ஒப்படைக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Updated On: 19 Sep 2021 4:30 PM GMT

Related News