/* */

திருச்சி ரயில்வே பாதுகாப்பு படையின் 36-வது ஆண்டு விழா

திருச்சியில் ரயில்வே பாதுகாப்பு படையின் 36-வது எழுச்சி நாள் பாதுகாப்பு விழா அணிவகுப்புடன் நடைபெற்றது.

HIGHLIGHTS

திருச்சி ரயில்வே பாதுகாப்பு படையின் 36-வது ஆண்டு விழா
X

திருச்சியில் நடந்த ரயில்வே பாதுகாப்பு படை ஆண்டு விழாவில் சிறப்பாக பணியாற்றிய அதிகாரி ஒருவருக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.

ரயில்வே பாதுகாப்பு படையின் 36–ஆம் ஆண்டு எழுச்சி நாள் அணிவகுப்பு விழா திருச்சி ஜங்ஷன் ரயில்வே கோட்ட மேலாளர் அலுவலக வளாகத்தில் இன்று காலை நடந்தது.

இவ்விழாவிற்கு சிறப்பு அழைப்பாளராக ரயில்வே பாதுகாப்புப் படையின் முதுநிலை கோட்ட ஆணையர் ராமகிருஷ்ணன் கலந்து கொண்டு தேசிய கொடியை ஏற்றி வைத்தார்.

அதனைத் தொடர்ந்து துப்பாக்கி ஏந்திய ரயில்வே பாதுகாப்பு படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை பார்வையிட்டு ஏற்றுக் கொண்டார்.

அதன் பின்னர் திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் மதுபானங்கள் கடத்தல், செயின் பறிப்பு, சூட்கேஸ் ,பேக் போன்ற உடமைகளில் தங்கம் மற்றும் போதைப் பொருட்களை மறைத்து வைத்து கடத்தி வந்தவர்கள் மற்றும் ஆதரவற்ற, வழிதவறிய குழந்தைகளை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைப்பு போன்ற பணிகளில் சிறப்பாக பணியாற்றியரயில்வே பாதுகாப்பு படை அதிகாரிகள் மற்றும் வீரர்களான ஜெயபிரகாஷ், ரவி முருகேசன், தனபால், அருண்குமார் மற்றும் செந்தமிழ் செல்வி ஆகியோருக்கு பாராட்டு சான்றிதழ்களை ரயில்வே பாதுகாப்புப் படையின் முதுநிலை கோட்ட ஆணையர் ராமகிருஷ்ணன் வழங்கி வாழ்த்துக் கூறினார். இவ்விழாவில் ரயில்வே பாதுகாப்பு படை உதவி கோட்ட ஆணையர் ஏ.கே. பாடி மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Updated On: 20 Sep 2021 4:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழைத்தண்டுகளில் நிறைந்திருக்கும் மருத்துவ நன்மைகள் பற்றி தெரியுமா?
  2. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி ஒற்றுமையை வலுப்படுத்த ஐந்து வழிகள் என்னென்ன தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே கறி மசாலா பொடி தயாரிப்பது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    சுவையான ரசப்பொடி, வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா?
  6. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...
  7. லைஃப்ஸ்டைல்
    கவலையை விரட்ட நீங்க ரெடியா?
  8. கோவை மாநகர்
    பாரதியார் பல்கலை., பகுதியில் நாய்கள் தாக்கி 3 மான்கள் உயிரிழப்பு
  9. கோவை மாநகர்
    கோவை ரயில் நிலையம் முன் குளம் போல் தேங்கிய சாக்கடை நீர் ; பயணிகள்
  10. கோவை மாநகர்
    கோவையில் போதை மாத்திரைகளை விற்பனை செய்த கும்பல் கைது