திருச்சியில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை; ஆர்.டி.ஓ.விசாரணை
பைல் படம்
திருச்சி திருவெறும்பூர் அருகே கணவனுக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதால் மனமுடைந்த இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது சம்மந்தமாக திருச்சி ஆர்டிஓ விஸ்வநாதன் விசாரணை செய்து வருகிறார்.
திருச்சி, திருவெறும்பூர் அருகே உள்ள குண்டூர் அய்யம்பட்டியை சேர்ந்தவர் ரங்கநாதன். இவர் மீன் வாங்கி விற்கும் தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி சரண்யா (வயது 25). இவர்கள் இருவருக்கும் கடந்த 2014-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் திருமணம் நடந்துள்ளது. இதில், இவர்களுக்கு அஜிஷ் (வயது 4), பவின் (வயது 2) என்ற இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளது.
இந்நிலையில் ரங்கநாதன் குண்டூர் குறிஞ்சி நகர் பகுதியில் வசித்து வரும் ஒரு, பெண்ணுடன் தகாத உறவு வைத்திருப்பதாக அடிக்கடி வீட்டில் பிரச்சனை இருந்துள்ளது. அதே போல் நேற்று காலை 10 மணிக்கு ரங்கநாதனுக்கும் சரண்யாவுக்கும் இடையே சண்டை ஏற்பட்டுள்ளது.
இதில் மனமுடைந்த சரண்யா குழந்தைகளை வீட்டில் வைத்துக் கொண்டு சுமார் 12.30 மணிக்கு தூக்கு மாட்டி இறந்து விட்டார்.
மேற்படி குழந்தைகள் அருகில் வசிப்பவர்களிடம் தனது அம்மா நீண்ட நேரமாக தொங்குவதாக கூறியுள்ளனர். அதனடிப்படையில் பக்கத்து வீட்டில் இருப்பவர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
தகவலின் பேரில் சம்பவ இடம் விரைந்து வந்த நவல்பட்டு போலீசார் சரண்யாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சரண்யாவுக்கும், ரங்கநாதனுக்கு திருமணமாகி 7 வருடங்கள் ஆகாததால் திருச்சி ஆர்டிஓ விஸவநாதன் விசாரணை செய்து வருகிறார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu