திருச்சியில் கத்தி முனையில் வழிப்பறி செய்தவர் கைது- சிறையில் அடைப்பு
X
By - Harishpriyan, Reporter |27 Oct 2021 4:50 PM IST
திருச்சியில் கத்தி முனையில் வழிப்பறி செய்தவரை செய்தவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
திருச்சி பொன்மலை மலை அடிவாரம் பகுதியை சேர்ந்தவர் செல்வம் (வயது 20). இவர் பொன்மலைப்பட்டி மெயின்ரோடு பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்த பொழுது அவரிடம் திருச்சி உறையூர் மேட்டு தெருவைச் சேர்ந்த சூரியபிரகாஷ் (வயது 25) என்பவர் கத்தியை காட்டி மிரட்டி ரூ.1,750/-ஐ பறித்து சென்றுள்ளார்.
இது குறித்து பொன்மலை காவல் நிலையத்தில் செல்வம் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சூரிய பிரகாஷை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu