/* */

துறையூர் அருகே ஆற்று நீரில் அடித்து செல்லப்பட்ட முதியவர் நிலை என்ன?

துறையூர் அருகே ஆற்று நீரில் அடித்துச் செல்லப்பட்ட முதியவரை தீயணைப்பு படை வீரர்கள் தேடி வருகின்றனர்.

HIGHLIGHTS

துறையூர் அருகே ஆற்று நீரில் அடித்து செல்லப்பட்ட முதியவர் நிலை என்ன?
X
ஆற்று வெள்ளத்தில் அடித்து  செல்லப்பட்ட முதியவர்.

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள கிருஷ்ணாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் பெருமாள் (வயது 75). இவர் தனது மாடுகளை வயலில் கட்டி இருப்பதாகவும் அவற்றை வீட்டிற்கு ஓட்டி வருவதாகவும் வீட்டில் உள்ளவர்களிடம் கூறிவிட்டு சென்றுள்ளார். பின்னர் பெருமாள் ஆற்றை கடக்கும் போது நீரில் இழுத்துச் செல்லப்பட்டார். இது குறித்து துறையூர் தீயணைப்பு துறையினர் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.

துறையூர் பகுதியில் விடிய விடிய கனமழை கொட்டித் தீர்த்ததால் பல்வேறு பகுதிகளில் நீர் நிலைகள் வேகமாக நிரம்பி வருகிறது. இதற்கிடையில் ஆற்றில் அதிகப்படியான நீர் செல்வதை அறிந்தும் முதியவர் கடந்து செல்ல முயற்சித்ததால் இந்த விபரீதம் ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் கூறினர்.

Updated On: 26 Nov 2021 4:31 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மத்தியபிரதேச மாநிலத்தில் தீப்பிடித்து எரிந்த வாக்குப்பதிவு...
  2. அரசியல்
    தமிழர்களை நிறத்தின் அடிப்படையில் பேசுவதா? காங்கிரசுக்கு பிரதமர் மோடி...
  3. சினிமா
    அச்சச்சோ அச்சச்சோ அச்சச்சோ பாடல் வரிகள்!
  4. லைஃப்ஸ்டைல்
    கவிதைக்கு பொய் அழகா..? அழகுக்கு கவிதை மெய்யா..?
  5. கவுண்டம்பாளையம்
    ரத்தினபுரியில் இருசக்கர வாகனம் திருட்டு ; போலீசார் விசாரணை..!
  6. கோவை மாநகர்
    டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி மாநகர காவல் ஆணையரிடம் மனு
  7. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி அருகே சாலை விபத்தில் இருவர் உயிரிழப்பு..!
  8. லைஃப்ஸ்டைல்
    விழுவதும் எழுவதும் குழந்தை பருவத்தே கற்ற பாடம்..!
  9. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் குடிநீர் விநியோக ஆய்வுக் கூட்டம்..!
  10. லைஃப்ஸ்டைல்
    உயிரோடு கலந்த உறவு மனைவி..! உயிரும் மெய்யும் கலந்த உறவு..!