/* */

திருவெறும்பூர் பகுதியில் புதிய மின்மாற்றியை அமைச்சர் தொடங்கி வைத்தார்

திருவெறும்பூர் பகுதியில் புதிய மின்மாற்றியை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மக்களின் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார்.

HIGHLIGHTS

திருவெறும்பூர் பகுதியில் புதிய மின்மாற்றியை அமைச்சர் தொடங்கி வைத்தார்
X

திருவெறும்பூர் பகுதியில் புதிய மின்மாற்றியை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திறந்து வைத்தார்.

திருச்சி மின் பகிர்மான பெருநகர் வட்டத்திற்கு உட்பட்ட திருவெறும்பூர் தொகுதியில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் கீழ் இயங்கும் திருச்சி கிழக்கு கோட்டம் திருவெறும்பூர் உட் கோட்டத்தில், கல்கண்டார் கோட்டை பிரிவிற்கு உட்பட்ட அதிக மின் அழுத்தம் சரிசெய்யவும் மற்றும் குறைந்த மின் அழுத்தத்தை நிவர்த்தி செய்யும் பொருட்டும் ரூ. 38.75 லட்சம் மதிப்பீட்டில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின் பேரில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கல்கண்டார் கோட்டை பிரிவில் மகாலட்சுமி நகர், ஆலத்தூர், காந்தி நகர், நாகம்மை வீதி, ராஜப்பா கிழக்கு கிருஷ்ணா ஸ்டோர்ஸ், மூகாம்பிகை நகர், அன்பில் நகர் ஆகிய இடங்களில் புதிய மின்மாற்றிகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.

இந்நிகழ்வில் , திருச்சி மண்டல தலைமை பொறியாளர் மேற்பார்வை பொறியாளர், திருச்சி செயற்பொறியாளர் கிழக்கு, திருச்சி உதவி செயற்பொறியாளர் திருவெறும்பூர் மற்றும் திருவெறும்பூர் கோட்டத்தின் கல்கண்டார் கோட்டை பிரிவு அலுவலக உதவி மின் பொறியாளர் மற்றும் பணியாளர்கள், தலைமை செயற்குழு உறுப்பினர் கே.என்.சேகரன், பகுதி கழக செயலாளர்கள் தர்மராஜ், நீலமேகம் மற்றும் வட்ட கழக நிர்வாகிகள் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 9 Dec 2021 10:23 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  2. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  3. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  4. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  5. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?
  6. விளையாட்டு
    மும்பை இந்தியன்ஸ் ஆட்டம் குறித்து ரோஹித் ஷர்மாவின் முதல் எதிர்வினை
  7. சோழவந்தான்
    சோழவந்தான் திரௌபதி அம்மன் கோவிலில் கீசகன் வதம்
  8. லைஃப்ஸ்டைல்
    அரிதாய் கிடைத்த மனித பிறப்பை மகிழ்ந்து கொண்டாடுவோம் வாங்க..!
  9. லைஃப்ஸ்டைல்
    வீட்டின் தூண்களாய், உலகின் ஒளியாய் விளங்கும் மகளிர் தினச் சிறப்பு...
  10. காஞ்சிபுரம்
    தொடங்கியது வரதராஜ பெருமாள் திருக்கோயில் பிரம்மோற்சவம்