/* */

திருச்சி காவிரி ஆற்றில் குளித்த போது நீரில் மூழ்கியவர் சடலமாக மீட்பு

திருச்சி காவிரி ஆற்றில் குளித்த போது நீரில் மூழ்கியவர் உடல் சடலமாக மீட்கப்பட்டது.

HIGHLIGHTS

திருச்சி காவிரி ஆற்றில் குளித்த போது நீரில் மூழ்கியவர் சடலமாக மீட்பு
X
காவிரியில் மூழ்கி இறந்த நாகராஜ்.

மதுரை ஆரப்பாளையத்தை சேர்ந்தவர் நாகராஜ் (வயது 50). இவர், மதுரையில் உள்ள ஒரு கடையில் துணி தைக்கும் டைலராக வேலை பார்த்து வந்துள்ளார். அவர், கடந்த 4 நாட்களுக்கு முன்பு திருச்சி பீம நகரிலுள்ள உறவினர் இல்ல துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வந்தார். பின்னர் அவர், காவிரி ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தபோது நீரில் மூழ்கினார். தீயணைப்பு துறையினர் கடந்த 4 நாட்களாக தேடிவந்தனர்.

அவரது உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்காததால் இது குறித்து திருச்சி கோட்டை போலீசில் புகார் கொடுத்தனர். இந்நிலையில் நேற்று திருவெறும்பூர் போலீஸ் எல்லைக்குட்பட்ட சர்க்கார்பாளையம் அருகில் காவிரி கரையோரம் பிணமாக கிடந்த நாகராஜின் உடலை திருவெறும்பூர் போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Updated On: 20 Dec 2021 11:40 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  2. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  3. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  4. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  5. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  7. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  8. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?