/* */

திருச்சி துவாக்குடி ஓம் சக்தி கோயிலில் நகை-பணம் திருடிய 2 பேர் கைது

திருச்சி மாவட்டம் துவாக்குடி ஓம்சக்தி கோயிலில் நகை-பணம் திருடிய 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்துகின்றனர்.

HIGHLIGHTS

திருச்சி துவாக்குடி ஓம் சக்தி கோயிலில் நகை-பணம் திருடிய 2 பேர் கைது
X

திருச்சி மாவட்டம் துவாக்குடியை அடுத்த ராவுத்தான்மேடு பகுதியில் ஓம்சக்தி கோயில் உள்ளது. இந்த கோவிலில் கடந்த 3 மாதத்துக்கு முன்பு மர்ம நபர்கள் சிலர் புகுந்து அங்குள்ள உண்டியலின் பூட்டை உடைத்து அதில் இருந்த பணத்தையும், அம்மன் கழுத்தில் இருந்த அரை பவுன் தங்கதாலியையும் திருடிச் சென்றனர்.

இதுகுறித்து துவாக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வந்த நிலையில் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது சந்தேகத்தின் பேரில் 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர்கள் காட்டூர் வடக்கு தெருவைச் சேர்ந்த மன்சூர்அலி (வயது 27), உசேன் அலி (வயது32)என்பதும், அவர்கள் தான் கோவிலின் பூட்டை உடைத்து நகை, பணத்தை திருடியதும் தெரிய வந்தது. அதன் பேரில் அவர்கள் 2பேரையும் போலீசார் கைது செய்தனர்.

Updated On: 29 Oct 2021 7:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நம்பிக்கையுடன் முன்னேற உதவும் சில எழுச்சியூட்டும் தமிழ் வரிகள்!
  2. லைஃப்ஸ்டைல்
    ‘ அமைதியான நதியினிலே ஓடும் ஓடம் ... அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்’
  3. வானிலை
    தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு...
  4. லைஃப்ஸ்டைல்
    அம்மா என்றழைக்காத உயிர் இல்லையே!
  5. கல்வி
    நாளை வெளியாகிறது 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்
  6. லைஃப்ஸ்டைல்
    ‘வாழ்க்கை என்பது மனிதர்களின் அனுபவங்களின் தொகுப்புதானே தவிர...
  7. காங்கேயம்
    வெள்ளக்கோவிலில் பல ஆண்டுகளாக செயல்படாத போக்குவரத்து சிக்னல்
  8. அவினாசி
    அவிநாசி சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை
  9. சோழவந்தான்
    சமயநல்லூரில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா
  10. உசிலம்பட்டி
    மதுரை காமராஜர் பல்கலைக்கழக கழக துணை வேந்தர் ராஜினமா