/* */

கீழ கல்கண்டார் கோட்டையில் அட்டகாசம் செய்த குரங்குகள் பிடிபட்டன

திருச்சி அருகே கீழ கல்கண்டார் கோட்டையில் அட்டகாசம் செய்த குரங்குகளை வனத்துறையினர் பிடித்து சென்றனர்.

HIGHLIGHTS

கீழ கல்கண்டார் கோட்டையில் அட்டகாசம் செய்த குரங்குகள் பிடிபட்டன
X

திருச்சி அருகே கீழ கல்கண்டார் கோட்டையில் அட்டகாசம் செய்த குரங்குகள் கூண்டில் அடைக்கப்பட்டன.

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள கீழ கல்கண்டார்கோட்டை அக்ரஹாரம் பகுதியில் குரங்குகள் அதிகமாக சுற்றித்திரிந்ததுடன் அப்பகுதியில் உள்ள பொதுமக்களையும், பள்ளி மாணவர்களையும், குழந்தைகளையும் அச்சுறுத்தி வந்தது.

இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் வனத்துறையினரிடம் புகார் தெரிவித்தனர்.

அதனை தொடர்ந்து நேற்று கீழ கல்கண்டார் கோட்டை அக்ரஹாரம் பகுதியில் பொதுமக்களை அச்சுறுத்தி வந்த 6 குரங்குகளை வனத்துறை மற்றும் அப்பகுதியின் சமூக ஆர்வலர்களான விஸ்ராந்த் மற்றும் சக்கரபாணி ஆகியோர் உதவியுடன் பிடிக்கப்பட்டது.

பின்னர் பிடிபட்ட குரங்குகளை புலிவலம் பகுதியில் உள்ள வனப்பகுதியில் நேற்று இரவு பத்திரமாக கொண்டுபோய் விடப்பட்டது.

இதனால் கல்கண்டார் கோட்டை அக்ரஹாரம் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள், சமூக ஆர்வலர்களுக்கும் வனத்துறையினருக்கும் நன்றியை தெரிவித்துள்ளனர்.

Updated On: 16 Jan 2022 5:18 AM GMT

Related News

Latest News

  1. பல்லடம்
    பல்லடத்தில் வெட்டப்பட்ட மரங்கள்; இயற்கை ஆர்வலர்கள் வேதனை
  2. லைஃப்ஸ்டைல்
    அப்பாவுக்கான பிறந்தநாள் வாழ்த்துகள் :
  3. லைஃப்ஸ்டைல்
    சர்வாதிகாரி என்ற வார்த்தையை உச்சரித்தாலே நினைவில் வரும் ஹிட்லர்
  4. லைஃப்ஸ்டைல்
    உழைக்கும் தோழர்களுக்கு ஒரு சல்யூட்..!
  5. குமாரபாளையம்
    சர்வ சக்தி மாரியம்மன் திருவிழா
  6. லைஃப்ஸ்டைல்
    ஒருபோதும் தன்னை நிரூபிக்க வேண்டியதில்லை. அதன் இருப்பு போதும்! அது தான்...
  7. தமிழ்நாடு
    புதுச்சேரி தேசிய தொழில்நுட்பக்கழகத்தின் புதிய இயக்குநர் பொறுப்பேற்பு
  8. கல்வி
    சென்னை சிப்பெட் வழங்கும் 3 ஆண்டு டிப்ளமோ படிப்புகள்: மாணவர் சேர்க்கை...
  9. லைஃப்ஸ்டைல்
    கஷ்டம் வரும்போது சிரிங்க..! துன்பம் தூசியாகும்..!
  10. வீடியோ
    Adani துறைமுகத்துல போதைப்பொருள் இருந்துச்சு என்ன நடவடிக்கை எடுத்தாங்க...