திருச்சி திருவானைக்காவல் அருகே வீடு இடிந்து பாதிக்கப்பட்டவருக்கு ஆறுதல்

திருச்சி திருவானைக்காவல் அருகே வீடு இடிந்து பாதிக்கப்பட்டவருக்கு ஆறுதல்

திருச்சி அருகே பனையபுரத்தில் வீடு இடிந்து பாதிக்கப்பட்டவருக்கு ஊராட்சி தலைவர் முத்துக்குமரன் ஆறுதல் கூறினார்.

திருச்சி திருவானைக்காவல் அருகே உள்ள பனையபுரத்தில் வீடு இடிந்து பாதிக்கப்பட்டவருக்கு ஊராட்சி தலைவர் ஆறுதல் கூறினார்.

திருச்சி திருவனைக்காவல் அருகே உள்ள பனையபுரம் சிவன் கோவில் தெருவை சேர்ந்தவர் கன்னியம்மாள் (வயது 35)இவர் தின கூலி வேலை பார்த்து வருகிறார்.

இந்த நிலையில் கன்னியம்மாளின் வீட்டின் சுவர் நேற்று முன்தினம் இரவு பெய்த பலத்த மழையில் இடிந்து விழுந்தது. அப்பொழுது வீட்டில் இருந்தவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்கள்.

இச்சம்பவம் குறித்து கன்னியம்மாள் பனையபுரம் கிராம நிர்வாக அலுவலர் சுதா மற்றும் பனையபுரம் ஊராட்சி மன்ற தலைவர் முத்துக்குமரனுக்கும் தகவல் கொடுத்தார்.

அதன் அடிப்படையில் நேற்று சம்பவ இடத்தை சுதாவும் முத்துக்குமரன் நேரில் சென்று ஆய்வு செய்ததோடு அரசு உதவி கிடைக்க வழிவகை செய்து வருவதாக கன்னியம்மாளிடம் கூறி சென்றார்.

Tags

Next Story